"மணற்கேணி - 2010"

Manarkeni 2009  More than a Blog Aggregator

சிங்கை பதிவுலகின் ஒரு மைல் கல்!..விழாக்கோலம் கண்டது

சிங்கை பதிவுலகின் ஒரு மைல் கல்!..விழாக்கோலம் கண்டது (மறுபதிப்பு)

சிங்கப்பூர் வலைப்பதிவர்கள் மற்றும் தமிழ்வெளி திரட்டி இணையதளம் இணைந்து நடத்திய மணற்கேணி 2009 நிறைவு விழா (மே 28,2010) மாலை சிங்கப்பூர் லிட்டில் இந்தியா ஆர்கெட் அருகில் உள்ள அப்பல்லோ பனானிலீஃப் உணவகத்தில் மாலை 6.00 மணியிலிருந்து கலைக்கட்டியது.

விழாவின் முக்கிய நிகழ்வாக மணற்கேணி 2009 சிறந்த கட்டுரைகள் எழுதி வெற்றிபெற்ற வெற்றியாளர்களுக்கு (
திரு.தருமி, திரு.பிரபாகர் மற்றும் திரு.தேவன்மாயம்) விருதுகள் வழங்கப்பட்டன. விருதுகள் வலைப்பதிவில் செயல்பட்டும் இணையத் தமிழ்வளர்ச்சிக்கு உறுதுணையாகவும் இருந்து தற்போது மறைந்துவிட்ட தேனி எழுத்துறு தந்த தேனி உமர் தம்பி, தேன்கூடு திரட்டி உருவாக்கி மாதம் தோறும் சிறுகதைகள் போட்டி நடத்தி தமிழ்பதிவர்களை ஊக்குவித்த திரு.தேன்கூடு சாகரன், கேன்சருடன் ஒரு யுத்தம் நடத்திக்கொண்டே தமிழ் வலையுலகில் கேன்சர் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் எழுதிய திருமதி.அனுராதா சுப்ரமணியன், தமிழ் கணிமை இணைய வளர்ச்சியில் பங்காற்றிய திரு.சிந்தாநதி அவர்களின் நினைவாக வழங்கப்பட்டது.






அதனை அடுத்து சிங்கை வலைப்பதிவர்களின் கட்டுரை தொகுப்பு நூல் "மணற்கேணி" வெளியிடப்படுகின்றது.



இந்த மாபெரும் விழாவை திரு.மா.அன்பழகன்,திருமதி சித்ரா ரமேஷ்,திருமதி ஜெயந்தி சங்கர், திரு விஜயபாஸ்கர், திரு.இராமகண்ணபிரான்,திரு.பாண்டியன், திரு.கவி, கவிஞர் பாலுமணிமாறன் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு சிறப்பித்தனர். மேலும் சிங்கப்பூர் வலைப்பதிவர்கள், வாசகர் வட்டம் உறுப்பினர்களும் கலந்துகொண்டு விழா சிறக்க துணையாக இருந்தார்கள். விழாவின் முடிவில் உணவும் வழங்கப்பட்டது.


விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்த அணைத்து நண்பர்களுக்கும் சிங்கப்பூர் வலைப்பதிவர்கள் மற்றும் தமிழ்வெளி திரட்டி இணையதளம் சார்பாக நன்றியை தெரியப்படுத்துகின்றேன்.... மேலும் அம்மா அப்பா வலை பூவின் சார்பாக அணைவருக்கும் நன்றி!


விழாக்கோலத்தை புகைப்படக் கோலமாக காண கீழ் உள்ள சுட்டியை சுட்டி மகிழலாம்....
விழாக்கோலம் கண்ட சிங்கை பதிவுலக புகைப்படங்களை காணலாம்....


அன்புடன்..
ஆ.ஞானசேகரன்..

மணற்கேணி 2009 விருது வழங்கும் மற்றும் நூல் வெளியீட்டு விழா



இன்னும் சிறிது நேரத்தில் மணற்கேணி 2009 விருது வழங்கும் மற்றும் நூல் வெளியீட்டு விழா அப்போலா பனானா லீவ் லோட்டஸ் உள்ளரங்கில் ஆரம்பமாகவுள்ளது.


மணற்கேணி நூல் வெளியீடு மற்றும் விருது வழங்கும் விழா

சிங்கப்பூர் வலைப்பதிவர்கள் மற்றும் தமிழ்வெளி திரட்டி இணையதளம் இணைந்து நடத்திய மணற்கேணி 2009 நிறைவு விழா இன்று(மே 28,2010) மாலை சிங்கப்பூர் லிட்டில் இந்தியா ஆர்கெட் அருகில் உள்ள அப்பல்லோ பனானிலீஃப் உணவகத்தில் நடைபெறுகின்றது. மாலை 7.00 மணியிலிருந்து 9மணி வரை நடைபெறுகின்றது.


சிங்கப்பூர் வலைப்பதிவர்களின் கட்டுரைகளின் தொகுப்பு நூல் "மணற்கேணி" என்ற தலைப்பில் வெளியிடப்படுகின்றது.

வலைப்பதிவில் செயல்பட்டும் இணையத் தமிழ்வளர்ச்சிக்கு உறுதுணையாகவும் இருந்து தற்போது மறைந்துவிட்ட தேனி எழுத்துறு தந்த தேனி உமர் தம்பி, தேன்கூடு திரட்டி உருவாக்கி மாதம் தோறும் சிறுகதைகள் போட்டி நடத்தி தமிழ்பதிவர்களை ஊக்குவித்த திரு.தேன்கூடு சாகரன், கேன்சருடன் ஒரு யுத்தம் நடத்திக்கொண்டே தமிழ் வலையுலகில் கேன்சர் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் எழுதிய திருமதி.அனுராதா சுப்ரமணியன், தமிழ் கணிமை இணைய வளர்ச்சியில் பங்காற்றிய திரு.சிந்தாநதி அவர்களின் பெயரில் இன்று மணற்கேணி 2009 இல் சிறந்த கட்டுரைகள் எழுதி வெற்றிபெற்ற வெற்றியாளர்களுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன.

அதன் பின் சிங்கை வலைப்பதிவர்களின் கட்டுரை தொகுப்பு நூல் "மணற்கேணி" வெளியிடப்படுகின்றது.

இன்றைய நிகழ்ச்சியில் திரு.மா.அன்பழகன்,திருமதி சித்ரா ரமேஷ்,திருமதி ஜெயந்தி சங்கர், திரு விஜயபாஸ்கர், திரு.இராமகண்ணபிரான்,திரு.பாண்டியன், திரு.கவி, கவிஞர் பாலுமணிமாறன் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொள்கின்றார்கள். மேலும் சிங்கப்பூர்வலைப்பதிவர்கள், வாசகர் வட்டம் உறுப்பினர்களும் கலந்துகொண்டு சிறப்பிக்கின்றனர்.





தொடர்புக்கு:
கோவி.கண்ணன் 98767586
குழலி 81165721


சிங்கப்பூர் தமிழ் வலைப்பதிவர்களும் தமிழ்வெளி இணையதளமும் இணைந்து நடத்திய மணற்கேணி 2009 கருத்தாய்வு போட்டியில் 50க்கும் மேற்பட்டவர்கள் தங்களின் தரமான கட்டுரைகளை அனுப்பி கலந்து கொண்டனர்.

மணற்கேணி 2009 வெற்றியாளர்களுடன் சிங்கை பதிவர்கள் ஒரு சந்திப்பு...

மணற்கேணி 2009 வெற்றியாளர்களுடன் சிங்கை பதிவர்கள் ஒரு சந்திப்பு...

மணற்கேணி 2009 கருத்தாய்வு போட்டியின் வெற்றியாளர்கள் திரு.தருமி, திரு.பிரபாகர் மற்றும் திரு.தேவன்மாயம் மூவரும் ஒரு வாரம் காலம் சிங்கப்பூரில் வெற்றியின் பரிசாக சுற்றுபயணம் மேற்கொண்டுள்ளார்கள். வெற்றியாளர்களின் இரண்டாம் நாள் நிகழ்வாக சிங்கப்பூர் வலைப்பதிவருகளுடன் ஒரு மாபெரும் சந்திப்பாக 23-05-2010 மாலை 4:30 மணிற்கு மேல் மேற்குகடற்கரை பூங்காவில் நடைப்பெற்றது. வெற்றியாளர்களும் சிங்கப்பூர் பதிவர்களும் தங்களின் மகிழ்வை பகிர்ந்துகொண்ட நிகழ்வு ஒரு வரலாற்று நிகழ்வாகதான் இருக்கும். சந்திப்பு மற்றும் BBQ பாபிக்கியூ உணவும் உண்டு மகிழ்ந்தனர். உணவின் முத்தாய்ப்பாக சிங்கை நாதனின் பாதாம் அல்வா சிறப்பான இடத்தை பிடித்தது.

விழாவின் சிறப்புகளை நமது பதிவர்கள் பகிர்ந்துக்கொள்வார்கள். மேலும் இதன் தொடர் நிகழ்வுகள் "சிங்கப்பூர் தமிழ்ப் பதிவர்கள் குழுமம்" தில் வெளியாகும். அன்று நடைபெற்ற நிகழ்வுகளை புகைப்படமாக பதியப்பட்டது. அப்படிப்பட்ட வரலாற்று புகைப்படங்களை சுட்டியை சுட்டி காணுங்கள்..... தாங்களும் அந்த மகிழ்வை பகிர்ந்துக்கொள்வதில் ஆணந்தமே.......

மணற்கேணி 2009 வெற்றியாளர்களுடன் சிங்கை பதிவர்கள் ஒரு சந்திப்பு...(புகைப்படங்கள்)

உங்களோடு பகிர்ந்துக்கொண்ட...
ஆ.ஞானசேகரன்







சிங்கையில் சிங்கங்கள் சந்தித்துக் கொண்டிருக்கின்றன...

சிங்கையில் பதிவர்கள் சேர்ந்து இயங்கி வரும் மணற்கேணி குழுமம் நடத்திய கட்டுரைப் போடடிகளின் வெற்றியாளர்கள் சிங்கை வந்து சேர்ந்தனர். 


வெற்றி சிங்கங்கள் தற்சமயம், சிங்கைப் பதிவர்களுடன் மேற்குக் கடற்கரைப் பூங்காவில் சந்தித்து இந்த மாலை வேளையை இனிதாகக் கழித்து வருகின்றனர். இதைப் பற்றிய விரிவான பதிவு விரைவில் வெளிவரும். அதற்கு முன்பு இங்கு நாங்கள் மகிழ்வதை, புகைப்படங்கள் மூலம் உலகத் தமிழ் வலைப் பதிவர்களுடன் பகிர்ந்துகொள்கிறோம்.



தருமி ஐயா




 பிராபகர்


தேவன்மாயம்



சிங்கை - பதிவர் சந்திப்பு - மேற்குக் கடற்கரைப் பூங்கா

ணற்கேணி போட்டியின் வெற்றியாளர்கள் கலந்துகொள்ளும் சிறப்பு சிங்கை பதிவர்கள் சந்திப்பு இன்று மாலை 4:30 மணிக்கு மேற்குகடற்கரை பூங்காவில் இடம்பெறுகிறது. அனைவரையும் வரவேற்கிறோம்.

இடம் : மேற்குக் கடற்கரைப் பூங்கா(WCP -
BBQ AREA :2; PIT :9)
நாள் : 23/05/2010
நேரம் : மாலை 4:30 மணி
சிறப்பு விருந்தினர்கள் : மணற்கேணி வெற்றியாளர்கள்
திரு.தருமி, திரு.தேவன்மாயம், திரு.பிரபாகர்

Getting There
(http://www.nparks.gov.sg/cms/index.php?option=com_visitorsguide&task=parks&id=41&Itemid=73)
Take services 176 and alight directly in front of West Coast Park. You can also take services 30, 51, and 143, alight in front of Clementi Woods Park (West Coast Road) and take a 5 minutes walk through West Coast Link to West Coast Park Area 3 (near to the Adventure Playground). Service 175 from Clementi Interchange also stops along West Coast highway parallel to West Coast Park.

மணற்கேணி வெற்றியாளர்கள் சிங்கை வருகை மற்றும் இன்றைய நிகழ்ச்சிகள்


சிங்கப்பூர் தமிழ் வலைப்பதிவர்களும் தமிழ்வெளி இணையதளமும் இணைந்து நடத்திய மணற்கேணி 2009 கருத்தாய்வு போட்டியில் 50க்கும் மேற்பட்டவர்கள் தங்களின் தரமான கட்டுரைகளை அனுப்பி கலந்து கொண்டனர். அதில் வெற்றிபெற்ற திரு.தருமி, திரு.பிரபாகர் மற்றும் திரு.தேவன்மாயம் அவர்கள் இன்று காலை சிங்கப்பூர் சாங்கி வானூர்தி நிலையம் வந்திறங்கினர், அவர்களை சிங்கை வலைப்பதிவர்கள் வரவேற்றனர்.





இன்று (சனிக்கிழமை மே 22 அன்று மாலை 5மணி அளவில் வாசகர் வட்டத்தில் சிங்கை வலைப்பதிவர்கள் மற்றும் தமிழ்வெளி இணைந்து நடத்தும் வெற்றியாளர் கட்டுரைகளின் மீதான திறனாய்வு கலந்துரையாடல் நடைபெறுகின்றது. சிங்கப்பூரில் உள்ள பதிவர்கள் மற்றும் ஆர்வலர்கள் கலந்துகொள்ளுமாறு வேண்டுகின்றோம்.

இடம் : தக்காளி அறை(Tomato Room) அங் மோக்கியா நூலகம்
நேரம் : மாலை 5:00 மணி
நாள் : சனிக்கிழமை, மே 22 - 2010


அரசியல் / சமூகம் பிரிவில் திரு.தருமி அவர்கள் சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டின்* பலமும் பலவீனமும் கட்டுரை முதலிடம் பிடித்தது

தமிழ் அறிவியில் பிரிவில் திரு.தேவன்மாயம் அவர்களின் கட்டுரை ஏமக்குறைநோய்(A I D S) - தேவன் மாயம் அவர்களும்

தமிழ் இலக்கியம் பிரிவில் திரு.பிரபாகர் அவர்களின் தமிழர் இசை தொடர்பான கட்டுரையும் வெற்றிபெற்றனர்

மணற்கேணி 2009 போட்டியில் கலந்து கொண்ட அனைத்து கட்டுரைகளையும் வாசிக்க இங்கே அழுத்துங்கள்

மணற்கேணி - 2009 வெற்றியாளர்கள் சிங்கை வருகை !

சிங்கைப் பதிவர்கள் மற்றும் தமிழ்வெளி இணைந்து நடத்திய மணற்கேணி - 2009 கருத்தாய்வு போட்டிகளின் வெற்றியாளர்களான திரு தருமி, திரு தேவன்மாயம் மற்றும் திரு பிரபாகர் ஆகியோர் வரும் சனிக்கிழமை அன்று சிங்கை வந்து போட்டியின் நிறைவை துவங்குகிறார்கள்.

நிறைவு நிகழ்ச்சியாக

1. நூல் வெளியிடு
2. கலந்துரையாடல்
3. பதிவர் சந்திப்பு

ஆகியவை நடை பெற இருக்கின்றன, இந்நிகழ்ச்சி பற்றிய அறிவிப்புகள் ஒன்றன் பின் ஒன்றாக நாளை முதல் வெளிவரும்.

Blogger template 'Fundamental' by Ourblogtemplates.com 2008.

Jump to TOP