"மணற்கேணி - 2010"

Manarkeni 2009  More than a Blog Aggregator

இன்றே இப்படம் கடைசி - மணற்கேணி 2010 போட்டி

மணற்கேணி 2010

தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு
- திருக்குறள் - 396


சிங்கப்பூர் வலைப்பதிவர்கள் மற்றும் தமிழ்வெளி இணையதளம் இணைந்து நடத்தும் கருத்தாய்வு போட்டி மணற்கேணி 2010ற்கான போட்டி ஆக்கங்கள் அனுப்ப வேண்டிய கடைசி நாள் இன்று. உங்கள் கட்டுரைகளை இன்றே அனுப்பி போட்டியில் பங்களிக்க வேண்டுகிறது மணற்கேணி 2010 நிர்வாகக் குழு.

இது பற்றிய முழு தகவல்கள் பெற இங்கே சுட்டவும் http://www.sgtamilbloggers.com/

இணைய போட்டிகள் / நிகழ்ச்சிகள் பணால் ஆவது ஏன் ?

போட்டி நடத்துவதன் மூலம் நாங்கள் கற்றவை :

1. போட்டி நடத்தும் குழுவினர்களும் அவர்களை ஊக்குவிக்கும் சில நண்பர்கள் தவிர்த்து போட்டியை எல்லோருமே ஊக்கப்படுத்த முயற்சிக்கமாட்டார்கள். ஊக்கப்படுத்த நினைக்கும் சிலர் முயற்சியும் எடுக்க மாட்டார்கள். இது பொதுவான நடைமுறைதான், போட்டி நடத்தும் குழுக்குள் இதைக் கருத்தில் கொண்டு போட்டியை சரியான முறையில் கொண்டு செல்ல வேண்டும், இணையத்தில் எழுத்துவழியான இலக்கிய போட்டி என்பது கமல்/ரஜினி படங்கள் ரிலிஸ் ஆவதைப் போல் எல்லோரும் பேசுவார்கள் என்கிற எதிர்பார்ப்பு எந்த ஒரு போட்டிக் குழுவும் ஏற்படுத்திக் கொண்டால் போட்டி நடத்துவதில் சுணக்கம் ஏற்பட்டுவிடும்

2. போட்டி அறிவித்தாகிவிட்டது, இனி ஆக்கங்கள் வந்துவிடும் என்று இருந்துவிட்டால் கிடைக்கும் போட்டி ஆக்கங்கள் மிகவும் சொற்பமாகவே இருக்கும், போட்டி குறித்த அறிவிப்புகளையும், அதன் தொடர்பிலான சுவையான தகவல்களையும் தருவதன் மூலமே போட்டியில் கலந்து கொள்ள தூண்டமுடியும். எந்த ஒரு நிகழ்ச்சியும் விளம்பரம் இல்லாமல், அதுபற்றிப் பேசப்படமால் பரவலாக எல்லோரையும் சென்று சேராது.

3. போட்டி நடத்தும் குழுவினர் அனைவரும் இயன்றவரை போட்டிக்குரிய பணிகளை பிரித்துக் கொண்டு தன்னார்வத்துடன் செய்தால் மட்டுமே போட்டியின் நிகழ்வுகள் அனைத்தும் வெற்றிகரமாக அமைந்து வெற்றியாளர்களை மனநிறைவு அடையச் செய்யும்

4. கவர்ச்சியான பரிசு அறிவிப்புகள் மிகுதியான போட்டியாளர்களை ஈட்டித்தரும் என்பதைவிட சிறுகதை / கதை / கவிதை போன்ற சிற்றிலக்கிய போட்டிகளுக்கே மிகுதியானவர்கள் பங்குபெறுகிறார்கள்.

5. நல்ல கட்டுரைகளை எழுதவேண்டும் அதன் மூலம் தம்மை வெற்றிகரமான சமூகப் பார்வையாளனாக / எழுத்தாளனாக மாற்றிக் கொள்ள முடியும் என்று எண்ணுவோர்கள் எழுத்தை நேசிப்பவர்களில் இரண்டு விழுக்காடு கூட இல்லை

6. ஏற்கனவே கலந்து கொண்டவர்கள் வெற்றிப் பெறாவிட்டாலும், அவர்கள் கலந்து கொண்டதற்கு ஒரு மின் அஞ்சல் கூட நன்றி சொல்லிப் போடவில்லை என்றால் அடுத்த முறை அவர்கள் கலந்து கொள்ளவே யோசிப்பார்கள் அல்லது புறக்கணித்துவிடுவார்கள்

7. போட்டி நடத்துவது குறித்து போட்டி நடத்தும் குழு முன்கூட்டிய திட்டவரைவை தமக்குள் விவாதிக் கொள்ளாவிட்டாலோ, முழுமையான திட்ட வரைவை கொண்டிருக்காவிட்டாலோ போட்டியை வழி நடத்துவதில் பல இடையூறுகள் வரும்


8. போட்டியிடுபவர்களில் சிலர் ஏற்கனவே வெளியானதை இணையத்தில் இருந்து அப்படியே எடுத்தும் அனுப்புகிறார்கள், இவற்றை சரியாக கவனிக்காமல் ஒருவேளை அந்த போட்டியாளர் வெற்றியாளர் ஆனால் பின்னர் பெரிய சர்சையே ஏற்படும்

9. போட்டியின் வெற்றியாளர்கள் பரிசு பெற வர இயலாத நிலையில் மாற்று ஏற்பாடுகளாக அடுத்த ஒருவருக்கு வெற்றியாளர் வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்க முன்கூட்டிய திட்டங்கள் வைத்திருக்க வேண்டும்


10. போட்டியை வழி நடத்த ஒரு தலை மிகவும் தேவை, ஆனால் அந்த தலை தலையாரியாகவோ நாட்டாமையாகவோ மாறியானால் பிறர் தன்னார்வத்தால் வேலை செய்ய முன்வரமாட்டார்கள். அனைவரையும் ஒருங்கிணைத்து செயல்படும் பொறுமையானவரே போட்டியை நடத்தும் குழுவிற்கான தலையாக இருப்பது போட்டியை வெற்றியாக்கும். போட்டி நடத்தும் குழுவிற்குள் ஒருவர் டாமினேசன் செய்ய நினைத்தால் அந்த அமைப்பே அடுத்தக் கட்டத்திற்குள் செல்லாமல் களைந்துவிடும்


இவற்றில் ஒரு சில எங்கள் குழு சந்திக்க நேரிட்டது, பிற குழுவிலும் இவை நடந்தேறி உள்ளன. போட்டி நடத்துபவர்களும், போட்டியில் கலந்து கொள்வோரும் இவற்றைக் கருத்தில் கொள்ள வேண்டும் என்பதற்காக தொகுத்து இருக்கிறோம், இங்கு போட்டி போட்டி என்று ஒரு குறியீடாகத்தான் கொடுத்து இருக்கிறோம், இணைய வெளி சார்பாக ஏற்பாடும் செய்யும் நிகழ்ச்சிகளும் இது பொதுவானது தான்

*****

அன்பான வலைப்பதிவர்களே, எழுத்தாளர்களே, மாணவ/மணிகளே மற்றும் வாசகர்களே, எங்களது (சிங்கை தமிழ் வலைப்பதிவ்ர்கள் மற்றும் தமிழ்வெளி இணைய தளம்) மணற்கேணி - 2010 போட்டிக்கான ஆக்கங்கள் வந்து சேர நாளை இரவு 12:00 மணி (இந்திய நேரப்படி) வரை மட்டுமே நேரம் உள்ளது, எழுதி அனுப்பாமல் வைத்திருந்தால் உடனே அனுப்பி வைத்துவிடுங்கள், கடைசி நேரத்தில் அனுப்பலாம் என்று வைத்திருந்தால் ஒருவேளை மின்வெட்டின் காரணமாக இணைய இணைப்பு கிடைக்காமல் போகலாம், கணிணி செயல்படாமல் போகலாம் அல்லது வேறு ஏதோ முதன்மையான வேலை இடையூறு வரலாம். எனவே காலவிரயம் செய்யாமல் முடிந்தவரையும் குறிப்பிட்ட நேர எல்லைக்குள் அனுப்பி வைத்துவிடுங்கள்.

போட்டிக் குறித்த அனைத்து தகவல்களுக்கான இணைய தளம் சுட்டி

அன்புடன்
மணற்கேணி - 2010
சிங்கப்பூர் தமிழ் வலைப்பதிவர்கள்
மற்றும் தமிழ்வெளி இணைய தளம்

இன்னும் 5 நாட்களே உள்ளன

சிங்கை வலைப்பதிவர்களும் தமிழ்வெளியும் இணைந்து நடத்தும் மணற்கேணி 2010க்கான கட்டுரை அனுப்ப இறுதி நாளுக்கு இன்னும் 5 நாட்களே உள்ளன...

உங்கள் கட்டுரைகளை விரைந்து அனுப்பி ஒரு வார சிங்கப்பூர் சுற்றுலாவை வெல்லுங்கள்


மேலும் விபரங்களுக்கு http://www.sgtamilbloggers.com/

போட்டித் தலைப்புகள்

பிரிவு-1: அரசியல் / சமூகம் (அச)


இந்தப் பிரிவில் எழுதப்படும் கருத்தாக்கங்கள் அனுப்ப வேண்டிய மின் அஞ்சல் politics@sgtamilbloggers.com

1. களப்பிரர் காலம்

2. இலவசத் திட்டங்கள் ஏற்படுத்தும் மாற்றங்கள் - நன்மை தீமைகள்

3. எல்லா சாதிகளும் ஒடுக்கப்பட்ட உணர்வு கொண்டிருப்பது ஏன்?

4. இந்திய கூட்டமைப்பில் தமிழர் நிலை

5. தமிழகத்தில் நகரமயமாக்கலும் விளைவுகளும்

6. கருத்துரிமை சுதந்திரம், ஊடகங்களின் வணிக நோக்கம், மாற்று ஊடகங்கள்

7. ஈழத்தமிழர் நிலை நேற்று இன்று நாளை

8. சமச்சீர் கல்வி

9. கூட்டாண்மை(Corporate) அரசியல் - நவீன சுரண்டல்

10. புலம் பெயர்ந்த தமிழர்களிடத்தில் தமிழ் மற்றும் தமிழர் பண்பாட்டு விழுமங்கள் - நேற்று இன்று நாளை

பிரிவு-2: தமிழ் அறிவியல் (அறி)


இந்தப் பிரிவில் எழுதப்படும் கருத்தாக்கங்கள் அனுப்ப வேண்டிய மின் அஞ்சல் science@sgtamilbloggers.com


1.மரபுசாரா ஆற்றல் வளம்

2,தமிழ் கலைச்சொற்களைப் பயன்படுத்தி அறிவியல் கட்டுரை

3.தொழில் நுட்பத்துடன் கூடிய இயற்கை வேளாண்மை

4.அருகி வரும் நிலத்தடி நீரால் சந்திக்கவிருக்கும் சிக்கல்களும் அறிவியல் தீர்வும்

5.கணித்தமிழ்


பிரிவு-3: தமிழ் மொழி / இலக்கியம் (இல)


இந்தப் பிரிவில் எழுதப்படும் கருத்தாக்கங்கள் அனுப்ப வேண்டிய மின் அஞ்சல் literature@sgtamilbloggers.com

1. பழந்தமிழ் இலக்கியங்களில் ஒடுக்கப்பட்டோர் குரல்கள்

2. உலகத்தமிழ் செம்மொழி மாநாடு

3. நாட்டுப்புற இலக்கியங்கள்

4. சேரர்கள்

5. உரையாசிரியர்கள்

6. தமிழ் விக்கிப்பீடியா

7. மெல்லத்தமிழினி வாழும்

8. எழுத்துச் சீர்திருத்தம்


24,25,26,27,28,29,30,31

மணற்கேணி போட்டித் தொடர்பான கட்டுரைகள் அனுப்ப இறுதி நாள் டிசம்பர் 31 , 2010 என்பதை மீண்டும் நினைவூட்டுகிறோம்.


மணற்கேணி போட்டித் தொடர்பான நிகழ்ச்சிகள் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. வரப் போகும் வெற்றியாளர்களை வரவேற்க நாங்கள் ஆயத்தமாக இருக்கிறோம்.

சிங்கப்பூரின் புதிய சுற்றுலா தளமான மெரீனா பே சாண்ட் காணப் போகும் வெற்றியாளர்களில் நீங்களும் ஒருவராக இருக்கலாம்.



போட்டி நிறைவுற இன்னும் எட்டே நாட்கள் உள்ளன, எளிமையான போட்டித் தலைப்புகளைக் கொடுத்து இருக்கிறோம், சமூகத்திற்கும் சிந்தனைகளுக்கு உடையவர் நீங்கள் என்றால் அதைக் கட்டுரையாக்கி எங்களுக்கு அனுப்பலாமே.

போட்டிப் பற்றி அனைத்து விவரங்களுக்குமான சுட்டி :



தமிழ்மணம் 2010 போட்டி வெற்றிக்கு- சில குறிப்புகள் !

என்னதான் வலைப்பூன்னு வலைபதிவைக் குறிப்பிட்டாலும் வெளம்பரம் இல்லை என்றால் காகிதப்பூ தான். தமிழ்மணம் விருதில் பலர் பதிவுகளை பரிந்துரைத்திருப்பீர்கள். எப்போதும் இல்லாத அளவுக்கு 1500 பதிவர்களுக்கு மேல் பங்கு பெறும் நிகழ்வாக அமைந்திருக்கிறது தமிழ்மணம் 2010 போட்டி, குழுவாக இயங்கும் பதிவர்களுக்குள் அந்த குழுவின் தலைகளுக்கு எப்படியேனும் வாக்குகள் கிடைத்துவிடும், எந்தக் குழுவிலும் இடம் பெறாமல் இருப்பவர்களுக்கு வாக்குகள் கிடைப்பது கடினம் ஏனெனில் பதிவின் உள்ளடக்கத்தின் தரத்திற்குக் கிடைக்காத வாக்குகள் 'இவர்' எழுதி இருக்கிறார் என்பதற்காகக் கிடைப்பது உண்டு. இது சமுகக் குறைபாடு இல்லை, நடைமுறைதான். போட்டியில் கலந்து கொள்ளும் 1500 இடுகைகளையும் அனைவரும் படித்திருப்பார்கள் என்று நினைக்க முடியாது. மனதில் நிற்கும் பதிவுகளுக்கு கண்டிப்பாக வாக்குப் போடுகிறவர்கள் உண்டு.

போட்டிகள் கலந்து கொள்வது வெற்றிப் படிகட்டில் ஏறுவதன் முயற்சி, கலந்து கொள்ளாமல் இருப்பவர்களுக்கு அந்த வாய்ப்புகள் கை நழுவி விடும், பரிசு சீட்டு வாங்கியவரில் யாரோ ஒருவருக்கு முதல்பரிசு, பரிசு சீட்டே வாங்காதவர்களுக்கு எதுவும் கிடைக்காது இல்லையா ? வெற்றியாளவர்கள் அனைவரும் முயற்சி செய்து அதை அடைந்தவர்கள், வெற்றி தோல்விகளை கணக்கில் கொள்ளாது முயற்சி செய்வது வெற்றியின் படிநிலை.

நீங்கள் தமிழ்மணம் 2010 போட்டியில் கலந்து கொண்டிருந்தால், அதைத் தெரியப்படுத்தி, உங்கள் போட்டி இடுகையை சுட்டிக்காட்டி வாக்களிக்கச் சொல்லிக் கேட்கலாம், பதிவு பிடித்திருந்தால் வாக்களிக்கப் போகிறார்கள். விளம்பரம் இல்லாமல் விற்பனைகள் இல்லை. இது எந்த ஒரு போட்டிக் களத்திற்கும் பொருந்தும்.
முதல்படியாக தமிழ்மணம் 2010 போட்டில் கலந்து கொண்டவர்கள், அடுத்தபடி ஏற வாக்களிக்கக் கேட்கலாமே.

*********

சிங்கைப் பதிவர்கள் / தமிழ்வெளி இணையதளம் சார்பாக நடத்தபடும் மணற்கேணி - 2010 தேதி நீட்டிக்கப்பட்டு வரும் டிசம்பர் 31 வரை கட்டுரைகள் பெறப்படுகின்றன. சென்ற ஆண்டு மூன்று பதிவர்களைத் தேர்ந்தெடுத்து சிங்கைக்கு அழைத்து சிறப்பு செய்தோம். இந்த ஆண்டு அப்படி வரப்போகிறவர்கள் நீங்களாகக் கூட இருக்கலாம். போட்டி முடிய இன்னும் 14 நாட்களே உள்ளன. இதுவரை அறிந்திடாவிடில் போட்டிப் பற்றிய முழு விவரமும் இங்கே இருக்கிறது. கலந்து கொள்ளுங்கள், சிங்கப்பூருக்கு வாருங்கள், நாங்கள் உங்களை சந்திக்க ஆவலாக உள்ளோம்.

அன்புடன்
மணற்கேணி - 2010

உடும்பு........பிடி........பிடி....!









*********

மணற்கேணி 2010 போட்டிக் கட்டுரைகள் அனுப்ப இன்னும் 17 நாட்களே உள்ளன.

விவரங்களுக்கு சிங்கைப் பதிவர்களின் இணைய தளம்,

களப்பிரர் காலம்

களப்பிரர் காலம் மிகுந்த புதிர்களை உள்ளடக்கிய காலம், தமிழகத்திலே சங்க கால பேரரசுகள் வீழ்ந்த பின் உருவானதே களப்பிரர்கள் ஆட்சி, களப்பிகளப்பிரர்காலத்தை இருண்டகாலமாக கூறுபவர்களும் உண்டு, களப்பிரர்காலத்தை விளிம்புநிலை மக்களின் குடியாட்சி என்று உரைப்பவர்களும் உண்டு.

நிறைய புதிர்களை உள்ளடக்கிய இந்த களப்பிரர்கள் காலம் பற்றிய ஆர்வமும் தேடுதலும் உங்களுக்கு இருக்கிறதா? சிங்கப்பூர் வலைப்பதிவர்கள் மற்றும் தமிழ்வெளி இணையதளம் இரண்டாம் ஆண்டாக நடத்தும் மணற்கேணி 2010ல் அரசியல் / குமுகாயம் என்ற பிரிவின் கீழ் "களப்பிரர் காலம்" என்ற தலைப்பில் கட்டுரை எழுதி டிசம்பர் 31க்கு முன் அனுப்புங்கள் போட்டியில் உங்கள் கட்டுரை வென்றால் பரிசாக சிங்கப்பூருக்கு ஒருவார சுற்றுலா பயணத்தை மேற்கொள்ளலாம்...

மேலும் விபரங்களுக்கு மணற்கேணி 2010 தளத்தை பாருங்கள்

எழுதுங்கள்! வெல்லுங்கள்!! சிங்கப்பூர் செல்லுங்கள்!!!

22 நாட்கள் !!!!

உலக பதிவர்களே
உங்கள் படைப்புகளை அனுப்ப இன்னும் 22 நாட்களே உள்ளன...விரைந்து அனுப்பி விடுவீர்...சிங்கப்பூர் செல்ல ஆயத்தமாவீர்


22 நாட்கள்

புதிய தலைமுறை இதழில் மணற்கேணி - சில ஊடக அனுபவங்கள்

இணையத்தில் நடத்தப்படும் மிகப்பெரியதொரு கருத்தாய்வு போட்டி இது... தமிழகத்தில் இதழ்களோ தொலைக்காட்சிகளோ கூட இப்படியானதொரு போட்டியும் அதற்கான பரிசாக மூவரை சிங்கப்பூர் அழைத்து செல்லுவதையும் செய்ததில்லை இதுவரை... முழுக்க முழுக்க சிங்கப்பூர் வலைப்பதிவர்கள் உழைப்பிலும் பொருளாலும் நடத்தப்படும் ஒரு முயற்சி இது...

சென்ற ஆண்டும் இந்த ஆண்டும் இப்போட்டிக்கான அறிவிப்பை வெளியிடக்கோரி பல்வேறு அச்சு ஊடகங்களில் கேட்டிருந்தோம், இணையத்துக்கும் அச்சு ஊடகத்துக்கும் அப்படி என்னதான் ஒரு மாமியார் - மருமகள் பிரச்சினையோ தெரியவில்லை சென்ற ஆண்டு மணற்கேணி அறிவிப்பு எந்த அச்சு ஊடகத்திலும் வெளியிடப்படவில்லை... மேலும் நெருங்கி கேட்டபோது பல்வேறு காரணங்களை கூறினார்கள், மணற்கேணி அமைப்பா புதுசா இருக்கே யாரு இவங்க, சொல்றதை செய்வாங்களா? ஒழுங்கா போட்டி நடத்தி சிங்கப்பூர் அழைத்து போவாங்களா என்பதில் ஆரம்பித்து நிறைய பதில்கள் கிடைத்தன... சில பத்திரிக்கைகளில் எடிட்டர் மேசை வரை கொண்டு சென்று நிராகரிக்கப்பட்டது, சென்ற ஆண்டும் இந்த ஆண்டும் அச்சு ஊடகத்தில் மணற்கேணி போட்டி பற்றிய அறிவிப்பை மேற்கொண்ட எமது பத்திரிக்கை நண்பர்கள்,பதிவர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகளை கூறுகிறோம்...



இந்த ஆண்டு முதன்முறையாக எழுத்தாளர் மாலன் ஆசிரியராக இருக்கும் "புதிய தலைமுறை" பத்திரிக்கையில் மணற்கேணி போட்டி அறிவிப்பு வெளியிடக்கோரியிருந்தோம், விரைவாக அடுத்த இதழிலேயே "புதிய தலைமுறை" இதழில் மணற்கேணி போட்டி அறிவிப்பை வெளியிட்டு உதவினார்கள். ஆசிரியர் மாலனுக்கும், உதவி ஆசிரியர் மற்றும் நிருபர் யுவகிருஷ்ணாவுக்கும் மணற்கேணி அமைப்பின் சார்பாகவும் தமிழ்வெளி நிர்வாகம் சார்பாகவும் நன்றிகளை உரித்தாக்குகிறோம்...


மறந்துடாதிங்க மணற்கேணி போட்டிக்கு கட்டுரை அனுப்ப வேண்டிய இறுதி நாள் டிசம்பர் 31,2010

கடைசி 24 நாட்கள் !!!

உலக பதிவர்களே
உங்கள் படைப்புகளை அனுப்ப இன்னும் 24 நாட்களே உள்ளன...விரைந்து அனுப்பி விடுவீர்...சிங்கப்பூர் செல்ல ஆயத்தமாவீர்


24 நாட்கள்

ஆண்கள், பெண்கள் அனைவரும் ரசிக்கும் சிங்கப்பூரின் 10

ஆண்கள், பெண்கள் அனைவரும் ரசிக்கும் சிங்கப்பூரின் 10

10. சுகாதாரம்: சிங்கப்பூரில் தண்ணீர் பாட்டில், வாட்டர் ஃபில்டர் விற்பதும் கொல்லன் பட்டறையில் ஊசி விற்பதும் ஒன்றுதான். சாதாரணமாக குழாயில் வரும் தண்ணீர் மிகவும் சுத்தமானது. தண்ணீர் பாட்டில் விற்பனையை தடை செய்வது பற்றி அரசாங்கம் தீவிரமாக யோசித்து வருகிறது. ஏனைய பெரு நகரங்களில் இருக்கும் பிரச்சினையான வாகனப் புகைகளால் காற்று மாசு படுவது என்பது இங்கு அறவே கிடையாது. அதற்கான கட்டுப்பாடுகள் மிகவும் அதிகம்.

9. உணவு: எந்த நாட்டினர் வந்தாலும் சிங்கப்பூரில் மிகவும் விரும்பும் ஒரு அம்சம், எல்லா இடங்களிலும் கிடைக்கும் அனைத்து விதமான உணவு வகைகள்தான்.இந்திய, சீன, மலேய, காண்டினென்டல், தாய்லாந்து, ஏன் பங்களாதேஷ், பாகிஸ்தான் உணவகங்கள் கூட உண்டு.

நம்ம ஊர் அன்னலஷ்மி, கோமள விலாஸ், சரவண பவன், அஞ்சப்பர் தவிர சிங்கப்பூர் முழுவதும் பெரும்பாலான ஃபுட் கோர்ட்களில் பரோட்டா, தோசை, பிரியாணி போன்ற உணவுகள் எளிதில் கிடைக்கும்.

8. சாலைகள்: சிங்கப்பூரின் அனைத்து சாலைகளிலும் உட்கார்ந்து சாப்பிடலாம்(ஆனா, விட மாட்டாங்க). அந்த அளவுக்கு சுத்தமாக இருக்கும். அதே நேரத்தில் மேடு பள்ளங்களோ, குழிகளோ, பாதாள சாக்கடை மூடிகளையோ காணக் கிடைக்காது.அனைத்து சாலைகளிலும் நடைபாதைகள் நிச்சயம் உண்டு.

7. சுத்தம்: ரெயில் வண்டி நிறுத்தமோ, பேருந்து நிலையமோ அல்லது எந்த ஒரு அரசு அலுவலகமோ கழிவறைகள் எல்லாம் அத்தனை சுத்தமாக இருக்கும்."சே..ச்சே... இங்கியா உச்சா போறது" அப்படின்னு நமக்கே வெக்கமா இருக்கும். பேருந்து, கார் நிறுத்துமிடம், வீடுகளுக்கு வெளியில் இருக்கும் பொதுவிடங்கள் மற்றும் புல் தரைகள் ஆகிய அனைத்துமே தும்பு, தூசி இல்லாமல் இருக்கும்.

6. நேர்மை : டாக்ஸி காரர்களில் ஆரம்பித்து, கடைக்காரர்கள்,அரசு அலுவலர்கள் வரை எவரிடமும் நீங்கள் ஏமாறுவதற்கான வாய்ப்பு குறைவு.தைரியமாக டாக்ஸியில் ஏறி உட்கார்ந்து முகவரியை சொன்னால் போதும், நிச்சயமாக அவர் ஊரையெல்லாம் சுற்றி காண்பிக்காமல் சரியான வழியில், சரியான இடத்துக்கு கொண்டு சேர்த்துவிடுவார். மீட்டரில் காண்பிக்கும் தொகையை கொடுத்தால் போதும்.

5. பொது போக்குவரத்து: சிங்கப்பூரின் எம்.ஆர்.டி (மாஸ் ரேப்பிட் ட்ரான்ஸிட்) எனப்படும் மெட்ரோ ட்ரெயின் சேவையை சிங்கப்பூரின் முதுகெலும்பு என்று கருதலாம். அனைத்து இடங்களுக்கும் எளிதாக, முன் அனுபவம் இல்லாதவர்கள் கூட செல்ல முடியும். இந்த எம்.ஆர்.டி நிலையங்களில் இருந்து சிறிது தொலைவில் இருக்கும் இடங்களுக்கு செல்ல அங்கிருந்தே எல்.ஆர்.டி (லைட் ரேப்பிட் ட்ரான்ஸிட்) எனப்படும் சிறிய ட்ரெயின்களோ அல்லது பேருந்துகளோ நிச்சயம் இருக்கும்.

4. பாதுகாப்பு: திருட்டு, வழிப்பறி, கொள்ளை போன்ற விஷயங்களை கேள்விப்படுவதே அரிதான விஷயம். இரவு 12 மணிக்கு கூட பெண்கள் அவ்வளவு ஏன் ஆண்கள் கூட தனியாக சர்வ சாதரணமாக நடந்து போகலாம்.அது மட்டுமல்ல தொடர் வண்டி (ட்ரெயின்), பேருந்து, வணிக வளாகங்கள், திரையரங்குகள், சுற்றுலாத் தலங்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் பாதுகாப்புக்கு முன்னுரிமை.

3. மொழி: சிங்கப்பூரில் மொழி ஒரு பிரச்சினையாகவே இருப்பதில்லை. கிட்டத்தட்ட அனைவருக்கும் ஆங்கிலம் ஒரளவாவது புரிந்து கொள்ளவும் பேசவும் தெரியும். தமிழர்களுக்கு கொண்டாட்டம் தான். ஏதாவது ஒரு இடத்தில் 5 நிமிடங்களுக்கு மேல் நின்றால் நிச்சயம் ஒரு தமிழரையாவது சந்தித்து விட முடியும். அது மட்டுமல்ல தமிழ் சிங்கப்பூரின் நான்கு அரசு மொழிகளில் ஒன்று. ஆகவே அரசு சம்பந்தப்பட்ட அறிக்கைகள், தகவல் பலகைகள் எல்லாம் தமிழிலும் இருக்கும்.

2. சுற்றுலா தலங்கள் : சிறிய ஊராக இருந்தாலும் பார்க்க வேண்டியவை ஏராளம். பறவைகள் பூங்கா,மாபெரும் ராட்டினம், மிருகக்காட்சி சாலை, சீனத்தோட்டம், சைனா டவுன், புத்தர் பல் கோவில், நம்ம ஊரு கோவில்கள், லிட்டில் இந்தியா மற்றும் பல. இதைத் தவிர செந்தோசான்னு ஒரு தீவு உண்டு. இங்கே அண்டர் வாட்டர் வேர்ல்ட், டால்ஃபின் ஷோ, 4 டைமென்ஷன் சினிமா, லேசர் ஷோ ஆகியவை நிச்சயம் பார்க்க வேண்டிய விஷயங்கள். முக்கியமாக இரவு 7 மணிக்குமேல் நடக்கும் லேசர் கதிர் காட்சியுடன் கூடிய ம்யூசிகல் பவுண்டன் பார்ப்பவர்கள் அனைவராலும் பாராட்டப்படும் ஒன்று.கீழே ஒரு சாம்பிள்.



1. சிங்கைப் பதிவர்கள்: தமிழே மூச்சு, தமிழே உணவு, தமிழே உயிர் என்று தமிழ் இலக்கியத்திற்காக தங்கள் உடல், பொருள், ஆவி இன்ன பிறவற்றை அர்ப்பணித்துக் கொண்டிருக்கும் இவர்களைப் பற்றி சொல்லிக் கொண்டே போகலாம். பல அற்புதமான படைப்புகளை வலைப்பூக்களில் தந்து கொண்டிருப்பவர்கள் இவர்கள். (சே.. ச்சே.. என்ன அப்படி பாக்கறீங்க? மத்தவங்கல்லாம் நல்லா எழுதுவாங்கங்க). விருந்தோம்பல் என்ற வார்த்தைக்கு எடுத்துக்காட்டாக திகழ்பவர்கள்.

அடடே.. எங்க வேகமா கெளம்பிட்டீங்க.சிங்கப்பூருக்கு டிக்கட் வாங்கத்தானே? கொஞ்சம் பொறுங்க. செலவே இல்லாமல் சிங்கப்பூருக்கு வந்து மேல சொன்ன விஷயங்கள பாக்கவும் அனுபவிக்கவும் முடியும்.நீங்க செய்ய வேண்டியதெல்லாம் இதுதான்.

சிங்கை பதிவர்கள் மற்றும் தமிழ்வெளி.காம் நடத்தும் கருத்தாய்வு போட்டியில் கலந்துக்குங்க, வெற்றி பெறுங்க... சென்னை 2 சிங்கப்பூர் பயணம் மற்றும் சிங்கப்பூரில் ஒரு வார சுற்றுலாவை பரிசா வெல்லுங்க...

மேலும் விபரங்களுக்கு இங்கே சொடுக்குங்க

சிங்கப்பூர் உங்கள் வீட்டில்

இணையம் இருந்தால் சிங்கப்பூர் சுற்றலாம் !

நெடுநாளாக காத்திருந்த கூகுள் வழி தெருக் காட்சி (Google Map Street View), சிங்கப்பூருக்கும் அறிமுகம் ஆகி இருக்கிறது.
(இணைப்பை அழுத்தியதும், அதில் தெரியும் ஆரஞ்சு நிற மனித பொம்மைப் படத்தை இழுத்து நீல நிற வழித்தடங்களில் வைத்தால், அந்த பகுதியை நன்றாக பார்க்கலாம், பெரிதாக்கியும் பார்க்கலாம்)

கணிணியும் விரைவு இணைய இணைப்பும் இருந்தால் நீங்கள் சிங்கப்பூரைச் சுற்றிப் பார்க்கலாம்.

சிங்கப்பூர் சுற்றுலாவிற்கு செல்லும் முன், Google Map Street View கொஞ்சம் மேய்ந்துவிட்டுச் சென்றால் செல்லும் இடம் பற்றி நன்றாக திரட்ட முடியும்.

நேரில் சிங்கையை காண மணற்கேணியில் போட்டியில் கலந்து கொள்ளுங்கள்..இலவசமாக சிங்கை வாங்க

Blogger template 'Fundamental' by Ourblogtemplates.com 2008.

Jump to TOP