மணற்கேணி 2010 முடிவுகள் தேதி அறிவிப்பு
அன்பார்ந்த மணற்கேணி தமிழ் கட்டுரைப் போட்டியாளர்களே! மற்றும் தமிழ் ஆர்வலர்களே!
மணற்கேணி 2010 போட்டிக்கான கட்டுரை ஆக்கங்கள் அனைத்தும் தலைப்பு மற்றும் பிரிவு வாரியாக முறையாகப் பிரிக்கப்பட்டு ஆய்வு திறன் கொண்ட நடுவர்களுக்கு அனுப்பப்பட்டுக்கொண்டு இருக்கிறது. கையினால் எழுதப்பட்ட ஆக்கங்களும், பி.டி.எஃப் கோப்புகளாகக் கிடைக்கப்பட்ட ஆக்கங்களும் மறுதட்டச்சு செய்யப்பட்டு ஒருங்குறிக்கு (யுனிக்கோட்) மாற்ற சில காலம் தேவைப்பட்டதால் திட்டமிட்டதில் சிறிது தாமதம் ஏற்பட்டது.
நமது அன்பிற்கும், மரியாதைக்கும் உரிய நடுவர்கள் விரைவில் தங்களுக்கான கட்டுரை பிரிவுகளை ஆய்வுசெய்து மிகச்சிறந்த ஆக்கங்களை விரைவில் தேர்ந்தெடுப்பார்கள். மணற்கேணி 2010 வெற்றியாளர்கள் பற்றிய முடிவுகள் மார்ச் 2011, 31-ந்தேதிக்குள் அறிவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
எங்களது மணற்கேணி 2010-க்கான போட்டியாளர்களின் புரிதலுக்கும், அன்பிற்கும் நெஞ்ச்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.