மணற்கேணி 2010 - வெற்றியாளர் நிகழ்ச்சிகள்.
மணற்கேணி 2010 முடிவுகள் அறிவிக்கப்பட்டு, வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டும் வரும் 27 ஆகஸ்ட் 2011 முதல் 3 செப் 2011 வரை சிங்கப்பூர் சுற்றுலா மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்காக வர இருக்கின்றன.
வெற்றியாளர்கள்
தமிழ் அறிவியல் பிரிவு : திரு லதானந்த்
அரசியல் / சமூகம் : செல்வன் ஜெ லியோ ப்ராங்களின்
தமிழ்மொழி இலக்கியம் : செல்வி வே.பத்மாவதி
வெற்றியாளர்களுக்கான நிகழ்ச்சிகள்:
நாள் : 28/ஆகஸ்ட்/2011 ; நேரம் : மாலை 3 மணி முதல் 5 மணி வரை
இடம் : அங்க்மோக்யோ நூலகம்
நிகழ்ச்சி : வாசகர் வட்டம்
வெற்றியாளர்களுக்கு சான்று ஆவணம் வழங்கி, வெற்றியாளர்களின் கட்டுரைகள் விமர்சனம் செய்யப்படும். இந்நிகழ்ச்சியில் சிங்கை எழுத்தாளர்கள் மற்றும் கவிஞர்கள் கலந்து கொள்கிறார்கள்.
வெற்றியாளர்களை அறிமுகம் செய்து, பதிவர்கள்
குழலி - நாட்டுப்புறப் பாடல்கள்
ஜோசப் பால்ராஜ் - மரபுசாரா ஆற்றல் வளம் மற்றும்
சமச்சீர் கல்வி - ரோஸ்விக் ஆகியோர் விமர்சனம் செய்கிறார்கள். விழாவில் தேனீர் மற்றும் சிற்றுண்டி அங்மோகியோ நூலக பொறுப்பாளர்களால் ஏற்பாடு செய்யப்படுகிறது.
நாள் : 28/ஆகஸ்ட்/2011 ; நேரம் : மாலை 7:00 முதல் 9:00 வரை
இடம் : காலங்க் சமூக மன்றம்
நிகழ்ச்சி : கவிமாலை
இந்நிகழ்ச்சியில் வெற்றியாளர்கள் பார்வையாளர்களாகக் கலந்து கொள்வர்
நாள் : 30/ஆகஸ்ட்/2011 செவ்வாய் கிழமை, நேரம் : மாலை 5 மணி - 8 மணி வரை
இடம் : சாங்கி கடற்கரை பூங்கா
நிகழ்ச்சி : வெற்றியாளர்களுடன் வெந்தழல் உணவு (BBQ)
பதிவர்கள் வாசகர்கள் கலந்து கொண்டு வெந்தழலில் சுட்டு உண்டு, கலந்து பேசும் நிகழ்ச்சியாக நடைபெறுகிறது.
அன்று ஹரிராயா (ரம்ஜான்) விடுமுறை ஆதலால் சிங்கப்பூர் வாசகர்கள், மற்றும் பதிவர்கள் மற்றும் அவரது நண்பர்கள் கலந்து கொள்கிறார்கள்
நிகழ்ச்சிகள் அனைத்தும் விடுமுறை நாட்களில் நடப்பதால் சிங்கைப் பதிவர்களும் வாசகர்களும், தவறாது கலந்து கொள்ள அழைக்கப்பட்டு, வெற்றியாளர்களை சிறப்பிக்கக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இந்நிகழ்ச்சிக்கு ஒத்துழைப்பு அளித்தவர்கள், சிங்கப்பூர் எழுத்தாளர்கள், கவிஞர்கள், கட்டுரை வழங்கியவர்கள், தமிழ்பதிவர்கள் மற்றும் வாசகர்கள் ஆகியோர்களுக்கு நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்
அன்புடன்
மணற்கேணி 2010 குழுமம்
3 பின்னூட்டங்கள்:
மகிழ்ச்சி......
வெற்றியாளர்களுக்கு வாழ்த்துகள்
வெற்றியாளர்களுக்கு இனிய நல்வாழ்த்துக்கள்!
இந்த இனிய நிகழ்வை ஏற்பாடு செய்த மணற்கேனி சிங்கை குரூப்ஸ் நண்பர்களுக்கு வாழ்த்துக்களும் சிறப்பு நன்றிகளும் பல...
நிகழ்வுகள் விடுமுறை நாட்களில் நடைபெறுவதால் நானும் கலந்துகொள்ள முயற்சிக்கிறேன்... :)
Post a Comment