மணற்கேணி 2010 வெற்றியாளர்கள் சிங்கை வருகை
மணற்கேணி 2010 ஆரம்பித்து கிட்டத்தட்ட ஓராண்டை நெருங்கும் இத்தருணத்தில் அதன் கடைசி கட்டத்தை எட்டியுள்ளது, மணற்கேணி 2010 வெற்றியாளர்கள் திரு லதானந்த் , செல்வன் ஜெ லியோ ப்ராங்களின் மற்றும் செல்வி வே.பத்மாவதி ஆகியோர் இன்று காலை சிங்கப்பூர் சாங்கி வானூர்தி நிலையத்தை அடைந்தனர், வெற்றியாளர்களுடன் அவர்களின் குடும்பத்தினரும் வந்திருந்தனர்...
சிங்கை வலைப்பதிவர்கள் அவர்களை இன்று காலை சிங்கப்பூர் சாங்கி வானூர்தி நிலையத்தில் வரவேற்றனர்.
வெற்றியாளர்களுக்கான நிகழ்ச்சிகள்:
நாள் : 28/ஆகஸ்ட்/2011 ;
நேரம் : மாலை 3 மணி முதல் 5 மணி வரை
இடம் : அங்க்மோக்யோ நூலகம்
நிகழ்ச்சி : வாசகர் வட்டம்
வெற்றியாளர்களுக்கு சான்று ஆவணம் வழங்கி, வெற்றியாளர்களின் கட்டுரைகள் விமர்சனம் செய்யப்படும். இந்நிகழ்ச்சியில் சிங்கை எழுத்தாளர்கள் மற்றும் கவிஞர்கள் கலந்து கொள்கிறார்கள்.
வெற்றியாளர்களை அறிமுகம் செய்து, பதிவர்கள்
குழலி - நாட்டுப்புறப் பாடல்கள்
ஜோசப் பால்ராஜ் - மரபுசாரா ஆற்றல் வளம் மற்றும்
சமச்சீர் கல்வி - ரோஸ்விக் ஆகியோர் விமர்சனம் செய்கிறார்கள். விழாவில் தேனீர் மற்றும் சிற்றுண்டி அங்மோகியோ நூலக பொறுப்பாளர்களால் ஏற்பாடு செய்யப்படுகிறது.
நாள் : 28/ஆகஸ்ட்/2011 ;
இடம் : காலங்க் சமூக மன்றம்
நிகழ்ச்சி : கவிமாலை
இந்நிகழ்ச்சியில் வெற்றியாளர்கள் பார்வையாளர்களாகக் கலந்து கொள்வர்
நாள் : 30/ஆகஸ்ட்/2011 செவ்வாய் கிழமை,
இடம் : சாங்கி கடற்கரை பூங்கா
நிகழ்ச்சி : வெற்றியாளர்களுடன் வெந்தழல் உணவு (BBQ)
பதிவர்கள் வாசகர்கள் கலந்து கொண்டு வெந்தழலில் சுட்டு உண்டு, கலந்து பேசும் நிகழ்ச்சியாக நடைபெறுகிறது.
அன்று ஹரிராயா (ரம்ஜான்) விடுமுறை ஆதலால் சிங்கப்பூர் வாசகர்கள், மற்றும் பதிவர்கள் மற்றும் அவரது நண்பர்கள் கலந்து கொள்கிறார்கள்
நிகழ்ச்சிகள் அனைத்தும் விடுமுறை நாட்களில் நடப்பதால் சிங்கைப் பதிவர்களும் வாசகர்களும், தவறாது கலந்து கொள்ள அழைக்கப்பட்டு, வெற்றியாளர்களை சிறப்பிக்கக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இந்நிகழ்ச்சிக்கு ஒத்துழைப்பு அளித்தவர்கள், சிங்கப்பூர் எழுத்தாளர்கள், கவிஞர்கள், கட்டுரை வழங்கியவர்கள், தமிழ்பதிவர்கள் மற்றும் வாசகர்கள் ஆகியோர்களுக்கு நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்
அன்புடன்
மணற்கேணி 2010 குழுமம்