"மணற்கேணி - 2010"

Manarkeni 2009  More than a Blog Aggregator

மணற்கேணி 2009 நிறைவும், மணற்கேணி 2010 துவக்கமும் !

விரைகணை வெற்றியாளர்கள் மற்றும் போட்டியில் கலந்து கொண்டோருக்கான பரிசுகள் வழங்காமல் மணற்கேணி 2009 நிகழ்வு நிறைவடையாது. போட்டியில் கலந்து கொண்டவர்கள் ஒவ்வொருவருக்கும் முகவரி வேண்டி தனி அஞ்சல் அனுப்பி இருக்கிறோம். சிலர் அஞ்சல் அனுப்பி இருக்கிறார்கள். இன்னும் பலரிடம் இருந்து அஞ்சல் வரவேண்டும்.

போட்டியில் கலந்து கொண்டவர்கள் தங்கள் இடுகையை அனுப்பிய அஞ்சல் முகவரிக்கே பரிசு நூல்கள் பெறுவதற்கான முகவரியையும் அனுப்பவும். அதுபோல விரைகணை வெற்றியாளர்கள் தங்கள் முகவரிகளை admin@tamilveli.comக்கு அஞ்சல் அனுப்பவும்.

இந்த அறிவிப்பு, பெரும் சுணக்கத்திற்குப் பிறகு வந்திருக்கிறது என்பதற்காக வருந்துகிறோம். இன்னும் ஒரு கிழமைக்குள் உங்கள் முகவரிகளை அனுப்பினால் பரிசு நூல்களை விரைவாக ஏற்பாடு செய்ய ஏதுவாக இருக்கும்.

*****

மணற்கேணி 2009 க்கிற்கு கிடைத்த வரவேற்பும், ஆக்கங்களும் 2010 ஐ நோக்கி அடியெடுத்து வைக்க துணிவு கொடுத்தது. மணற்கேணி 2010 குறித்த அறிவிப்புகள் (இத்திங்களுக்குள்) விரைவில் வெளியாகும். மேலும் சிறப்பான பரிசுகளுடன் அறிவிப்புகள் வெளியாக இருக்கிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

போட்டியின் போது கிடைத்த துய்ப்புகள், போட்டியை நடத்திச் செல்லும் வலிமை மற்றும் நடைமுறை படிப்பினைகள் கொடுத்திருக்கின்றன, எனவே 2010க்கான போட்டிகள் விரைவாக அறிவிக்கப்பட்டு விரைவாக முடிவுகள் அறிவிக்கப்பட்டு விரைவாகவே நிறைவு செய்யப்படும்.

நைஜிரியா இராகவன் பதிவர் சந்திப்பு அறிவிப்பு !

இன்று மாலை 6 - 8 மணிக்கு சிங்கைப் பதிவர்களை அண்ணன் திரு நைஜிரியா இராகவன் சந்திக்க ஆர்வமாக உள்ளார்.

இடம் : செரங்கூன் ப்ளாசா (முஸ்தபா) எதிர் பக்கம் உள்ள திடல்
நேரம் : மாலை 6:00 - 8:00
நாள் : 31 ஜூலை 2010

விருப்பமுள்ளவர்கள் கலந்து கொள்ளவும்

தொடர்பு கொள்ள :
நைஜிரியா இராகவன் : 8503 6326
ஜோசப் பால்ராஜ் : 9337 2775

பின்குறும்பு : பட்டபட்டி மற்றும் வெளியூர்காரன் கட்டாயமாகக் கலந்து கொள்ளவும்

Blogger template 'Fundamental' by Ourblogtemplates.com 2008.

Jump to TOP