"மணற்கேணி - 2010"

Manarkeni 2009  More than a Blog Aggregator

Cable சங்கர்: சாப்பாட்டுக்கடை- சம்பத் கெளரி மெஸ்

Cable சங்கர்: சாப்பாட்டுக்கடை- சம்பத் கெளரி மெஸ்

பாஸ் நாங்கள்லாம் சைதாப்பேட்டை வந்தா கேபிள் அண்ணண் வீட்ல தான் பாஸ் சாப்புடுவோம்.

மணற்கேணி 2010 - நினைவுத் துளிகள்


மணற்கேணி 2010 இனிதே நிறைவுற்றது, போட்டி முடிவுகளை அறிவிப்பது உள்ளிட்ட போட்டித் தொடர்பானவற்றில் சில தொய்வுகள் ஏற்பட்டிருந்தாலும், எடுத்துக் கொண்டதை இனிதே முடிப்போம் என்று முனைந்து சிங்கைப்பதிவர்கள் செயல்பட்டு முடித்திருக்கின்றனர். சென்ற ஆண்டைப் போல் தன்னார்வப் பதிவர்கள் தாமாக முன்வரவில்லை, மேலும் போதிய உற்சாகம் குழுவுக்குள்ளேயே கிடைக்கவில்லை என்பதை வெளிப்படையாக ஒப்புக் கொள்ள நேரிடுகிறது, அது குறித்து காரணங்களை ஆய்ந்து அடுத்தக்கட்ட மணற்கேணி நகர்வு பற்றி முடிவுகள் எடுக்கப்படும். அதுவரை மணற்கேணி 2011 பற்றிய அறிவிப்புகள் எதுவும் வெளி வராது. எனக்கு தெரிந்து வெளிப்படையான அரசியல்கள், தனிப்பட்ட ஆளுமைகள் எதுவும் நடைபெறவில்லை என்பதை குறிப்பிட்டுக் கொள்கிறேன். நடந்தவைப் பற்றிய தொகுப்பிற்காக.

வெற்றியாளர் வருகை :

வெற்றியாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட திரு லாதனந்த், செல்வி வே.பத்மாவதி மற்றும் செல்வன் லியோ ப்ராங்கிளின் ஆகியோர் தத்தம் உறவுகளோடு இருவர் இருவராக சென்ற சனிக்கிழமை 27 ஆகஸ்ட் 2011, சிங்கை திட்ட விமான நிலையத்திற்கு (பட்ஜெட் டெர்மினல்) காலை 6:30 மணியளவில் வந்து சேர்ந்தனர், வந்தவர்களுக்கு வரவேற்பு அளித்து, அருகில் இருந்த விமான நிலையம் முனையம் இரண்டிற்குச் சென்று அவர்களுகான சிற்றுண்டிகள் வழங்கப்பட்டு, மற்ற விமான நிலைய முனையங்கள் சுற்றிக்காட்டப்பட்டன, அதன் பிறகு மகிழுந்துவில் அவர்களுக்காக பதிவு செய்திருந்த லிட்டில் இந்தியாவில் அமைந்திருந்த விடுதி அறைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைப்பாறியதுடன் அன்று மாலையே பறவைகள் பூங்காவிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு செல்லும் முன் பூன்லே பகுதியில் அமைந்த அஞ்சப்பர் உணவகத்தில் மதிய உணவு வழங்கப்பட்டது, மாலை பறவைப் பூங்கா சுற்றுலா முடிந்ததும், மீண்டும் குட்டி இந்தியாவில் அவர்களுக்கான இரவு உணவும் தரப்பட்டது.

வாசகர் வட்டம் :

மறுநாள் பதிவர் நண்பர்கள் சிலர் (குறிப்பாக பிரியமுடன் பிரபு, ரோஸ்விக்) ஆகியோர் வெற்றியாளர்களை நகரப்பகுதிக்கு அழைத்துச் சென்று சுற்றிக்காடினர், மாலையில் அங்க்மோ கியோ நூலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட வாசகர் வட்ட நிகழ்ச்சியில் அனைவருக்கு தேனீர் வழங்கப்பட்டு, பின் அவர்களுடைய ஆக்கங்கள் பற்றிய கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது,  இந்நிகழ்ச்சிக்கு வாசகர் வட்ட பொறுப்பாளர் திருமதி சித்ரா ரமேஷ் மற்றும் நூலகப் பொறுப்பாளர் ஏற்பாடு செய்து நன்றாக அமைத்துக் கொடுத்தனர், நிகழ்ச்சியின் நிறைவில் மணற்கேணி 2010 வெற்றியாளர் சான்றாவணமாக செதுக்கிய பட்டயங்கள் வழங்கப்பட்டன, அவற்றை வெற்றியாளர்களுக்கு திருமதி சித்ரா ரமேஷ், திரு பாலுமணிமாறன் மற்றும் திரு ஷாநவாஸ் ஆகியோர் வழங்கினர்.

மேலும் விபரங்களுக்கும் படங்களுக்கும் ...
*
செந்தழல் உணவு கூடல் :

மறுநாள் திங்கள் கிழமை வெற்றியாளர்கள் தன்னிச்சையாக செந்தோசா தீவுற்கு சென்று வந்தனர். நேற்றைய (30/ஆகஸ்ட்/2011) நிறைவு நிகழ்ச்சி சாங்கி கடற்கரை பூங்காவில் 'செந்தழல் உணவும்' பாராட்டு மற்றும் நன்றி அறிவித்தலும் நடந்தேறியது, சுமார் 4 மணி நேரம் நடைபெற்ற இந்நிகழ்வில் சைவ அசைவ உணவுவகைகள் செந்தழலில் சுடப்பட்டு வழங்கப்பட்டது, பின்னர் வெற்றியாளர்கள் தங்கள் அனுபவங்களையும் கருத்துகளையும் பகிர்ந்து கொள்ள நிகழ்ச்சிகள் அனைத்தும் இனிதே நிறைவுற்றனர். வெற்றியாளர்கள் தாங்கள் செய்து கொண்ட முன்னேற்பாட்டின் படி மலேசியாவிற்கும் சென்று பின்னர் தாயகம் திரும்புவர்.
 (குழலி  & பிரியமுடன் பிரபு )

 (govikannan)

 (giri,Joseph Paulraj,Jegadeesan )



(senthil nathan(singai nathan) 




(rosevic,vetrikathiravan,karunakarasu)


மணற்கேணி 2010 நிகழ்ச்சியில் பெரும்பங்காற்றிய, நன்கொடை வழங்கிய அனைத்து பதிவர்களுக்கும் நன்றியையும் பாராடுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். குறிப்பாக ரொஸ்விக் மற்றும் பிரியமுடன் பிரபு ஆகியோர் வெற்றியாளர்களுக்கு நல்வழிகாட்டியாக வழிநடத்தினர், நண்பர் ஜோசப் பால்ராஜ் வெற்றியாளர்களுக்கு தனிப்பட்ட விருந்து வைத்தார், நிதி நிர்வாகங்களை முகவை இராம் கவனித்துக் கொண்டதுடன், வெற்றியாளர்கள் தங்கும் இடம் மற்றும் விமான பயண முன்பதிவுகளை கவனித்துக் கொண்டார், திரு ஜெகதீசன் மணற்கேணி 2010 குழுமப் பொறுப்புகளை வகித்து பல்வேறூ கூட்டங்களை தலைமைத்தாங்கி நடத்தினார், போட்டியின் முடிவுத் தேர்வுகளை பாஸ்கர் மற்றும் குழலி ஆகியோர் வழிகாட்டினர்.

நிகழ்ச்சியில் கட்டுரை அனுப்பி கலந்து கொண்டவர்கள் அனைவருக்கும் நன்றி, வெற்றியாளர்கள் தவிர்த்து ஏனையோருக்கு பங்கெடுத்ததற்காக ஊக்கப்பரிசாக நூல்கள் அனுப்பி வைக்கப்படும்.
மேலும் படங்களுக்கும் ...
அன்புடன்
மணற்கேணி 2010 குழுமம்

மணற்கேணி - 2010 வெற்றியாளர்கள் சிங்கப்பூரில் ...

மணற்கேணி 2010 - ன் வெற்றியாளர்கள் திரு லதானந்த்,செல்வன் ஜெ லியோ ப்ராங்களின், செல்வி வே.பத்மாவதி ஆகிய மூவரும் கடந்த சனி கிழமை (27 /08/2011) காலை சிங்கப்பூர் வந்து சேர்ந்தார்கள் . கடந்த முன்று நாட்களாக அவர்கள் சிங்கப்பூரில் பல இடங்களை சுற்றி பார்த்து மகிழ்ந்தார்கள் .இவற்றின் இடையே ஞாயிறு அன்று மாலை சிங்கை அன்-மோ-கியோ நுலகத்தில் உள்ள தக்காளி அறையில் (tomoto room ) "வாசகர் வட்டம்" என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள் . அங்கு வெற்றியாளர்களுக்கு சான்று ஆவணம் வழங்கி, வெற்றியாளர்களின் கட்டுரைகள் விமர்சனம் செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சிங்கை எழுத்தாளர்கள் மற்றும் கவிஞர்கள் கலந்து கொண்டார்கள் .பின் காலங்க் சமூக மன்றத்தில் நடைபெற்ற கவிமாலை நிகழ்ச்சியில் வெற்றியாளர்கள் பார்வையாளர்களாகக் கலந்து கொண்டார்கள்.


புகைப்படங்கள்

குழலி (எ) பொ.புருஷோத்தமன்

லதானந்த் தம்பதியினர் மற்றும் ரோஸ்விக்

கோவியார், பாதிரியார் பிலிப் சுதாகர் மற்றும் லியோ ப்ராங்க்ளின்
சிங்கப்பூர் எழுத்தாளர் சித்ரா ரமேஷ்
பாண்டித்துரை (எ) நீதிப்பாண்டி மற்றும் 'தங்கமீன்' பாலு மணிமாறன்

எழுத்தாளர் மற்றும் கவிஞ்ர் ஷாநவாஷ்
ஜோசப் பால்ராஜ் மற்றும் குழலி

பரிசுபெரும் வெற்றியாளர் செல்வி வே.பத்மாவதி


அங்க்மோக்கியோ நூலக வாசகர் வட்டம் நிகழ்ச்சி

அன்புடன்
மணற்கேணி 2010 குழுமம்

Blogger template 'Fundamental' by Ourblogtemplates.com 2008.

Jump to TOP