மணற்கேணி - 2009 அறிவியல் பிரிவு வெற்றியாளர் அறிவிப்பு.
தலைப்பு: நவீனகால நுண்ணோக்கிகள்
எழுதியவர்: இரா.இரஞ்சித்
வலைதள முகவரி: http://kaiyedu.
வெற்றி பெற்ற இரஞ்சித் அவர்களுக்கு சிங்கைப் பதிவர்கள் சார்பாக எங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
:: தமிழால் ஒன்றுபட்டோம் ::
தலைப்பு: நவீனகால நுண்ணோக்கிகள்
எழுதியவர்: இரா.இரஞ்சித்
வலைதள முகவரி: http://kaiyedu.
வெற்றி பெற்ற இரஞ்சித் அவர்களுக்கு சிங்கைப் பதிவர்கள் சார்பாக எங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
வெளியிட்டவர்: ஜோசப் பால்ராஜ் நாள்/நேரம் 2/10/2010 08:00:00 AM 23 பின்னூட்டங்கள்
குறிசொற்கள் அறிவியல் பிரிவு, முடிவுகள்
மணற்கேணி முடிவுகள் வருமா ? வராதா ? போட்டி நடக்கிறதா ? இல்லையா ? என்று தத்தமுக்குள் பதிவர்கள் பந்தயம் கட்டிய தாக அறிந்தோம், இன்னும் சிலர் மணற்கேணி 2009 என்கிற தலைப்பையே கூட மறந்திருப்பார்கள். பதிவர்கள் அனைவரிடத்திலும் இதன் காலம் தாழ்த்துதல் குறித்து வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம். காலம் தாழ்ந்தற்கு சில காரணங்கள் உண்டு, குறிப்பாக சிறப்பான நடுவர்களைத் தேர்ந்தெடுக்கவும், அவர்களின் ஒப்புதல் பெறவும் காலம் நீண்டது.
மணற்கேணி போட்டிக்கு 50 கட்டுரைகள் வரையில் வந்தது. 90 விழுக்காடு கருத்து செறிவுடன் எதிர்பார்த்ததை விட சிறப்பான உழைப்பை எழுத்தில் காட்டி இருந்தனர். போட்டியில் கலந்து கொண்டவர்கள் அனைவருக்கும் நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
குழு மின் அஞ்சலுக்கு வந்த மின் அஞ்சல்களுக்கு, பின்னூட்டங்களுக்கு உடனடியாக பதில் கூற முடியவில்லை, அந்த மின் அஞ்சல்களை நாள் தோறும் தொடர்பில் இருக்கும் மற்ற மின் அஞ்சல்களுடன் இணைத்திருக்காததால் உடனடியாக மின் அஞ்சல்களை வாசிக்க முடியாமல் போய் விட்டது. வருந்துகிறோம்.
மணற்கேணி போட்டி குறித்து கேள்வி எழுப்பிய பின்னூட்டங்கள் தானாகவே வெளியாகி இருந்ததால் கேள்விகளை உடனுக்குடன் படிப்பதற்கு வாய்பில்லாமல் போய் விட்டிருந்தது. மட்டுறுத்தல் வைத்திருந்தால் வெளி இடும் போதே அதற்கான பதிலும் சொல்லி இருக்க முடியும். இந்த போட்டியை நடத்தும் அனைவருமே பகுதி நேரமாக செய்வதாலும், முதல் முறையாக இவ்வாறான போட்டி நடத்துவதாலும் போதிய துய்ப்புகளை இதில் தான் கற்றுக் கொள்கிறோம். அடுத்து நடத்தும் போட்டிகளில் இந்த குறைகளை களைந்துவிட்டு சிறப்பாக செயல்படுவோம் என்கிற உறுதி கூறுகிறோம்.
போட்டி முடிவுகள்:
அரசியல், அறிவியல் மற்றும் இலக்கியம் இவற்றில் அறிவியல் பிரிவு நடுவர்களால் அறிவியல் பிரிவுக்கு வந்த கட்டுரைகளில் பரிசு பெரும் கட்டுரை முடிவு செய்யப்பட்டுள்ளது.
அறிவியல் போட்டியில் வெற்றியாளர் பற்றிய முடிவு வரும் புதன் கிழமை 10/பி/2010 (தேதி குறிப்பிட்டாகவிட்டது சத்தியமாக சொல்லிவிடுவோம்)
அறிவிக்கப்படும்
இலக்கியப் போட்டியின் முடிவு வரும் 12/பிப்/2010 அன்று அறிவிக்கப்படும்
அரசியல் பிரிவு பிப்ரவரி இறுதிக்குள் அறிவிக்கப்படும்.
போட்டியில் பங்கெடுத்தவர்கள் அனைவருக்கும் சிறப்பு பரிசுகள் உண்டு
வெளியிட்டவர்: கோவி.கண்ணன் நாள்/நேரம் 2/08/2010 04:19:00 PM 2 பின்னூட்டங்கள்
குறிசொற்கள் அறிவியல் பிரிவு, சிங்கபூர், சிங்கப்பூர் பதிவர்கள், போட்டி, மணற்கேணி -2009
மணற்கேணி - 2009 போட்டிக்கு வந்த கருத்தாய்வு ஆக்கங்கள் :
பிரிவு-3: தமிழ் மொழி / இலக்கியம் (இல)
(தமிழ் கலைச்சொற்களைப் பயன்படுத்தி ஒரு அறிவியல் கட்டுரை)
நவீன கால நுண்ணோக்கிகள் - மணற்கேணி2009 - பகுதி 1
நவீனகால நுண்ணோக்கிகள்
(Modern day Microscopes)
முன்னுரை:
மனிதயினம், தனது சிந்தனைத்திறன் மூலம் காண்பவை அனைத்தின் மீதும் கேள்விகளைத் தொடுத்து தனது தேடல்களை விரிவாக்கிக்கொண்டிருந்தது, தற்போதும் விரிவாக்கிக் கொண்டிருக்கிருக்கிறது. அப்படி மனிதன் வியந்து போகும் மற்றும் வியந்து கொண்டிருக்கும் அறிவியல் துறைகளுள் ஒன்று “வானவியல்”. தன்னால் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குமேல் அடைய முடியாத மற்றும் கற்பனை செய்யமுடியாத அளவில், பெரிதாயிருந்ததுவும், மனிதன் வானவியலை வியந்து நோக்கியதற்கு முக்கியக் காரணங்களில் ஒன்று. ஆனால், மேலே வானில் விரிகின்ற அதிசயங்களுக்கு இணையாகவும் அல்லது அதற்கு மேலும் ஆச்சர்யமூட்டும் ஒரு உலகு மனிதனின் கண்களுக்குப் புலனாகாத நுண்ணுயிரிகள், அணுக்கள் மற்றும் அணுக்கருத் துகள்களின் உலகம். இப்படி எளிதாக மனிதக் கண்களுக்குப் புலனாகாத உலகம் குறித்த தேடலில் விளைந்த ஒரு அரிய கண்டுபிடிப்பே நுண்ணோக்கிகள் (microscopes). மேலும் படிக்க ...
நவீன கால நுண்ணோக்கிகள் - பகுதி 2
ஈ. நவீன நுண்ணோக்கிகள்
20ஆம் நூற்றாண்டின் துவக்க காலங்கள் நவீன இயற்பியலில் மிகவும் குறிப்பிடத்தகுந்த ஆண்டுகாலம் எனலாம். பொருண்மை, ஆற்றல், அணு எனப் பல விடைதெரியா புதிர்களுக்கு விடைகள் கிடைத்த காலம் 20ஆம் நூற்றாண்டின் துவக்க காலம் எனலாம். இன்றைக்கு இயற்பியலில் கோலோச்சிக்கொண்டிருக்கும் பிந்து சித்தாந்தத்தின் (Quantum Theory) துவக்க காலங்கள் அவை. மேலும், அறிவியலின் தேடல், நுணுகிய பொருட்களுக்குள் புகுந்து அவற்றின் உலகைக் கண்டு இரசிக்கத் துவங்கியிருந்த காலம். அணுவே உலகின் மிகச்சிறிய துகள் என்று மனிதன் எண்ணியிருந்தது உடையத் துவங்கிய காலம். அணுவிற்குள்ளும் அதனினும் சிறிய துகள்கள் உண்டு எனப் புரியத் துவங்கியது. மேலும் படிக்க ...
எழுதியர் கையேடு
*****
பதிவர் திரு கையேடு அவர்களுக்கு மணற்கேணி குழுவினர் சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். கட்டுரைக்கு அவரது பக்கத்தில் உங்கள் கருத்துகளையும் ஊக்கங்களையும் அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
- மணற்கேணி குழு
(சிங்கைப் பதிவர்கள் குழுமம்)
வெளியிட்டவர்: கோவி.கண்ணன் நாள்/நேரம் 10/08/2009 09:30:00 AM 0 பின்னூட்டங்கள்
குறிசொற்கள் அறிவியல் பிரிவு, கட்டுரைகள், மணற்கேணி -2009
Blogger template 'Fundamental' by Ourblogtemplates.com 2008.