"மணற்கேணி - 2010"

Manarkeni 2009  More than a Blog Aggregator

ஈழத்தமிழர் உரிமைப் போராட்டம் பலமும் பலவீனமும்

மணற்கேணி - 2009 போட்டிக்கு வந்த கருத்தாய்வு ஆக்கங்கள் :
பிரிவு-1: அரசியல் / சமூகம் (அச)
ஈழத்தமிழர் உரிமைப் போராட்டம் பலமும் பலவீனமும்

I. புகுமுன் உங்களோடு ...

ஈழம் என்னும் நிலப்பகுதி தமிழர்களுடையது. இலங்கையும் தமிழ்ச்சொல். இலங்கை முழுவதும் பரவியிருந்த தமிழர்கள் அங்கு ஆட்சி செலுத்தினர்.

காலப்போக்கில் அவர்களது ஆட்சி எல்லை இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் மட்டும் உள்ளதாக மாறியது.

ஈழம் என்று அழைக்கப்பட்ட இலங்கை நாளாவட்டத்தில் சிங்களர் தம் குடியேற்றம் மற்றும் அடக்கு முறையால், வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளை உள்ளடக்கிய தமிழ் ஈழமாகச் சுருங்கியது. சோழ அரசன் ராசராசன் மெய்கீர்த்தியில் முரண் தொழில் சிங்களர் ஈழ மண்டிலமும் என்று தமிழர் பகுதிகளையும்

சிங்களர் பகுதிகளையும் வரையறுத்திருக்கிறது.

மேலும் படிக்க>>>>>>>

எழுதியவர்: டாக்டர் முனியப்பன் ( முனியப்பன் பக்கங்கள்)

மணற்கேணி குழுவினர் சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். கட்டுரைக்கு அவரது பக்கத்தில் உங்கள் கருத்துகளையும் ஊக்கங்களையும் அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

- மணற்கேணி குழு
(சிங்கைப் பதிவர்கள் குழுமம்)

நவீன கால நுண்ணோக்கிகள் (அறிவியல்) !

மணற்கேணி - 2009 போட்டிக்கு வந்த கருத்தாய்வு ஆக்கங்கள் :

பிரிவு-3: தமிழ் மொழி / இலக்கியம் (இல)
(தமிழ் கலைச்சொற்களைப் பயன்படுத்தி ஒரு அறிவியல் கட்டுரை)

நவீன கால நுண்ணோக்கிகள் - மணற்கேணி2009 - பகுதி 1

நவீனகால நுண்ணோக்கிகள்
(Modern day Microscopes)

முன்னுரை:

மனிதயினம், தனது சிந்தனைத்திறன் மூலம் காண்பவை அனைத்தின் மீதும் கேள்விகளைத் தொடுத்து தனது தேடல்களை விரிவாக்கிக்கொண்டிருந்தது, தற்போதும் விரிவாக்கிக் கொண்டிருக்கிருக்கிறது. அப்படி மனிதன் வியந்து போகும் மற்றும் வியந்து கொண்டிருக்கும் அறிவியல் துறைகளுள் ஒன்று “வானவியல்”. தன்னால் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குமேல் அடைய முடியாத மற்றும் கற்பனை செய்யமுடியாத அளவில், பெரிதாயிருந்ததுவும், மனிதன் வானவியலை வியந்து நோக்கியதற்கு முக்கியக் காரணங்களில் ஒன்று. ஆனால், மேலே வானில் விரிகின்ற அதிசயங்களுக்கு இணையாகவும் அல்லது அதற்கு மேலும் ஆச்சர்யமூட்டும் ஒரு உலகு மனிதனின் கண்களுக்குப் புலனாகாத நுண்ணுயிரிகள், அணுக்கள் மற்றும் அணுக்கருத் துகள்களின் உலகம். இப்படி எளிதாக மனிதக் கண்களுக்குப் புலனாகாத உலகம் குறித்த தேடலில் விளைந்த ஒரு அரிய கண்டுபிடிப்பே நுண்ணோக்கிகள் (microscopes). மேலும் படிக்க ...


நவீன கால நுண்ணோக்கிகள் - பகுதி 2

ஈ. நவீன நுண்ணோக்கிகள்

20ஆம் நூற்றாண்டின் துவக்க காலங்கள் நவீன இயற்பியலில் மிகவும் குறிப்பிடத்தகுந்த ஆண்டுகாலம் எனலாம். பொருண்மை, ஆற்றல், அணு எனப் பல விடைதெரியா புதிர்களுக்கு விடைகள் கிடைத்த காலம் 20ஆம் நூற்றாண்டின் துவக்க காலம் எனலாம். இன்றைக்கு இயற்பியலில் கோலோச்சிக்கொண்டிருக்கும் பிந்து சித்தாந்தத்தின் (Quantum Theory) துவக்க காலங்கள் அவை. மேலும், அறிவியலின் தேடல், நுணுகிய பொருட்களுக்குள் புகுந்து அவற்றின் உலகைக் கண்டு இரசிக்கத் துவங்கியிருந்த காலம். அணுவே உலகின் மிகச்சிறிய துகள் என்று மனிதன் எண்ணியிருந்தது உடையத் துவங்கிய காலம். அணுவிற்குள்ளும் அதனினும் சிறிய துகள்கள் உண்டு எனப் புரியத் துவங்கியது. மேலும் படிக்க ...


எழுதியர் கையேடு

*****

பதிவர் திரு கையேடு அவர்களுக்கு மணற்கேணி குழுவினர் சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். கட்டுரைக்கு அவரது பக்கத்தில் உங்கள் கருத்துகளையும் ஊக்கங்களையும் அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

- மணற்கேணி குழு
(சிங்கைப் பதிவர்கள் குழுமம்)

மணற்கேணி - 2009 அடுத்தது என்ன ?

சிங்கைப் பதிவர்கள் மற்றும் தமிழ்வெளி இணைந்து நடத்திய "மணற்கேணி - 2009" கருத்தாய்வுப் போட்டியில் மிக ஆர்வமுடன் பங்கேற்று கட்டுரைகள் அனுப்பிய அனைவரையும் மணற்கேணிக் குழு மிகவும் பாராட்டி நன்றி தெரிவித்துக் கொள்கிறது

இன்று முதல் கட்டுரை அனுப்பியவர்கள் அந்தக் கட்டுரைகளை தங்களது வலைத்தளத்தில் வெளி இடலாம்.

போட்டி முடிவுகள் நவம்பர் திங்கள் இறுதிக்கு முன் வெளி ஆகிவிடும். கிடைத்திருப்பது அனைத்துமே சிறப்பான கட்டுரைகள் ஆகையால் அவற்றை சீர்த்துக்கிப் பார்த்து மதிப்பீடு செய்யும் தகுதியானவர்கள் மூலம் கட்டுரைகள் படிக்கப்பட்டு மதிப்பெண்கள் இடப்படும்.

போட்டியின் முதல் மூன்று பரிசுகள் தவிர்த்து அனைத்துக் கட்டுரைகளுக்கும் சிறப்புப் பரிசுகள் அளிக்க மணற்கேணிக் குழுவினரால் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளதை இங்கே மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

50 கட்டுரைகள் வரை கிடைத்த அனைத்துமே மிகவும் தரமானவை என்பதால் போட்டியின் நோக்கம் மிகச் சரியாக நிறைவேறி இருப்பதுடன், பங்கேற்றப் பதிவர்களின் உழைப்பும் அதில் அடங்கி இருந்ததிலிருந்து அறிந்து கொண்டிருக்கிறோம்.

இந்த வரவேற்பு எங்கள் குழுவை அடுத்த ஆண்டு மேலும் மற்றொரு மாறுபட்ட போட்டி நடத்த ஊக்கப்படுத்தி இருப்பதையும் இங்கே மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

போட்டியில் இணைந்து செயல்பட்ட தமிழ்வெளி இணையதளம் மூலம் கிடைத்த விளம்பரங்கள் போட்டி பற்றி மிக முழுமையான தகவல்களை பரப்புவதற்கு வழிவகை ஏற்படுத்தி நல்ல பயனளித்துள்ளது. பல்வேறு திரட்டிகள் இது போல் பதிவர்களுடன் இணைந்து செயல்படும் போது திரட்டிகளுக்கும் பதிவர்களுக்குமிடையேயான ஒத்துழைப்பும் புரிந்துணர்வும் மேலும் வளரும் என்பது மெய்ப்பட்டு இருக்கிறது.

மணற்கேணி - 2009 தொடர்பான விளம்பரங்களை வெளியிட்ட அனைத்துத் திரட்டிகள், இணைய இதழ்கள் ஆகியவற்றிற்கு நன்றி தெரிவித்துக் கொள்வதுடன், அந்த விளம்பரங்கள் தமிழ்வெளி மூலம் தங்கள் பதிவுகளில் இணைக்கப்பட்டதை ஏற்றுக்கொண்ட பதிவர்கள் பலருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

மணற்கேணித் தொடர்பான தகவல்கள், செய்திகள், கட்டுரைகள் ஆகியவற்றைப் பாராட்டியவர்கள், படித்தவர்கள் மற்றும் இது பற்றிய இடுகைகள் வெளிட்டவர்கள் அங்கு பின்னூட்டமிட்டு ஆதரித்த அனைவருக்கும் நன்றிக் கூறிக் கொள்கிறோம்.

கேட்டவுடன் மணற்கேணி - 2009 இலச்சினை செய்து கொடுத்த பதிவர் நண்பருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வெற்றியாளர்களுக்கு பரிசுகள் அறிவித்தப் பிறகு.....அடுத்தப் போட்டி அறிவுப்பு உங்களுக்காக, உங்களைத் தேடி வரும்.

போட்டியில் பங்கு பெற்றவர்கள் பற்றிய விவரங்கள் அடுத்த அறிவிப்புகளில் வெளிவரும்.

அனைவருக்கும் மீண்டும் நன்றி நன்றி நன்றி !

சிங்கையில் லேசான நில அதிர்வு !

ஐந்து நிமிடங்களுக்கு முன் சிங்கையில் லேசான நில நடுக்கம் உணரப்பட்டது. எனது இருக்கை லேசாக அசைய .... அருகில் அமர்ந்திருந்த மற்றொரு சீனப் பெண் 'ஷேக்கிங்க்....ஷேக்கிங்க்' என்று குரல் எழுப்பினாள்.

ரிக்டர் அளவு விவரம் தெரியவில்லை.

கிட்டதட்ட அது பற்றிய தகவல் இங்கே


இந்தோனிசியா சுமத்திரா தீவு அருகில் அடிக்கடி நில நடுக்கம் / அதிர்வு ஏற்படும், அது சற்று பெரியதாக இருக்கும் போது சிங்கையிலும் உணரப் படும். சுனாமி எச்சரிக்கை விடப்படுமா என்கிற தகவல் இனிமேல் தான் வெளியாகும்.

எதற்கும் தமிழக கடற்கரைப் பகுதிக்கு செல்பவர்களை தவிர்க்கச் சொல்லுவோம்.

முழுத்தகவல் தற்பொழுது வெளியாகி இருக்கிறது

Blogger template 'Fundamental' by Ourblogtemplates.com 2008.

Jump to TOP