"மணற்கேணி - 2010"

Manarkeni 2009  More than a Blog Aggregator

2009 ஆண்டு நிறைவு சிங்கை பதிவர் சந்திப்பு – 31.12.2009

அன்புடையீர்…!

2009 ல் முதல் பதிவர் சந்திப்பை முதலில் வைத்த நாம், மறுபடியும் ஆண்டிறுதியில் கடைசி நாளில் சந்திக்கிறோம். ஆண்டின் ஆரம்பத்தில் ஒரு சந்திப்பில் கலந்து கொண்ட ஒரு முக்கிய பிரபலம், ஆண்டிறுதியில் நடக்கும் எமது இந்த சந்திப்புக்கும் வந்து கலந்து கொள்கிறார். அவர் வேறு யாருமல்ல, ”அழகிய சிங்கர்” என செல்லமாக அழைக்கப்படும் “அப்துல்லா” அண்ணர் அவர்கள்தான்.

[IMG_4872.jpg]


இடம்: Bishan Park, (Near Bishan MRT)

திகதி: வியாழன் 31.12.2009

நேரம்: மாலை 4 – 7 வரை


Map picture

Google map link இங்கே.


Bishan MRT ல் இருந்து நடக்கும் தூரம். எப்படியும் முன்கூட்டியே செல்லும் ஜெகதீசனை தொடர்பு கொண்டு சரியான இடத்தை கண்டடையவும். மழைக்காலம் என்பதால் தகுந்த முன்னேற்பாடுகளுடன் வரவும்.

யாராவது Marina Bay Countdown க்கு செல்வதாக இருந்தால் அப்படியே 2010ன் முதல் சந்திப்பைக் கூட நடத்தலாம்.:-)

நன்றி…


இணையம் இருந்தால் சிங்கப்பூர் சுற்றலாம் !

நெடுநாளாக காத்திருந்த கூகுள் வழி தெருக் காட்சி (Google Map Street View), சிங்கப்பூருக்கும் அறிமுகம் ஆகி இருக்கிறது.
(இணைப்பை அழுத்தியதும், அதில் தெரியும் ஆரஞ்சு நிற மனித பொம்மைப் படத்தை இழுத்து நீல நிற வழித்தடங்களில் வைத்தால், அந்த பகுதியை நன்றாக பார்க்கலாம், பெரிதாக்கியும் பார்க்கலாம்)

கணிணியும் விரைவு இணைய இணைப்பும் இருந்தால் நீங்கள் சிங்கப்பூரைச் சுற்றிப் பார்க்கலாம்.

சிங்கப்பூர் சுற்றுலாவிற்கு செல்லும் முன், Google Map Street View கொஞ்சம் மேய்ந்துவிட்டுச் சென்றால் செல்லும் இடம் பற்றி நன்றாக திட்ட முடியும்.

இணைப்பைச் சுட்டி பெயர்பெற்ற இந்தியர் நிறுவனம் சிங்கப்பூர் முஸ்தபாவை கண்டு களியுங்கள்

அலைபேசியில் சுட்ட படங்கள்- சீனர்களின் காலண்டர் ஆண்டு

அலைபேசியில் சுட்ட படங்கள்- சீனர்களின் காலண்டர் ஆண்டு

ஆங்கில ஆண்டுகள், தமிழ் ஆண்டுகளை போலவே சீனர்களுக்கும் பனிரண்டு ஆண்டுகள் இருக்கு. இவைகள் ஒவ்வொன்றும் விலங்குகளின் பெயர்களை கொண்டுள்ளது. அவைகள் எந்தந்த ஆண்டுகள் வரும் என கணிக்கப்பட்டுள்ளது. அவைகளின் சிலைகள் என் அலைபேசியின் கண்ணில் பட்டது கிளிக்........
1.எலி ஆண்டு
2.எருது ஆண்டு
3.புலி ஆண்டு
4.முயல் ஆண்டு
5.கடல்நாகம் ஆண்டு
6.பாம்பு ஆண்டு
7.குதிரை ஆண்டு
8.வெள்ளாடு ஆண்டு
9.குரங்கு ஆண்டு
10.சேவல் ஆண்டு
11.நாய் ஆண்டு
12.பன்றி ஆண்டு

இப்படி ஆண்டுகளைப்பற்றி இந்த சிலைகள் சொல்லுகின்றது. மேலும் எந்தந்த ஆண்டுகள் வரும் என்ற குறிப்பும் உள்ளது படத்தில் மேல் சுட்டி பெரிதாக்கி பார்க்கவும். இந்த ஆண்டு எருது ஆண்டாக இருக்கின்றது... படம் சொல்லும் செய்திக்கு போவோம்...















கேஆர்எஸுடன் பதிவர் சந்திப்பு படங்கள் !







ஆன்மீக இளம் புயல் சிங்கை வருகை !

அன்புடையீர், வருகிற சனிக்கிழமை நண்பரும், ஆன்மிகத்தில் மிகுந்த நாட்டம் கொண்டவரும், 2008 தமிழ்மணம் விருதுகளில் சிறந்த ஆன்மிக இடுகை எழுதியவர் என்று பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவருமான அன்பு தம்பி, கேஆர்எஸ் என்கிற கண்ணபிரான் இரவி சங்கர் என்கிற மாதவி பந்தல் ஆன்மிக இளம் புயல் தனிப்பட்ட பயணமாக சிங்கை வருகை தருகிறார்.

தம்பி கேஆர்எஸ்சின் வருகையை முன்னிட்டு சிங்கை செங்காங்க் பகுதியில் பதிவர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.

நாள் : வரும் சனிக்கிழமை 07/நவ/2009
நேரம் : மதியம் 2 முதல் மாலை 5 வரை
இடம் : சிங்கப்பூர், செங்காங் கற்சிலை பூங்கா (Sengkang Sculpture Park)
(வரை படம் - மேல் இணைப்பை அழுத்திப் பார்க்கவும்)


Thanks : streetdirectory.com

சிற்றுண்டி ஏற்பாடு : செங்காங், புங்கோல் பதிவர்கள்
சிறப்புரை : கேஆர்எஸ்

சிங்கைப் பதிவர்கள் அனைவரும் அலைகடலென திரண்டு வருக.

பேருந்து, இலகு விரைவு வண்டி(MRT) பற்றிய விவரங்களுக்கு தொடர்புகளுக்கு :

ஜெகதீசன் : 90026527
ஜோசப் பால்ராஜ் :9337275
கோவி.கண்ணன் : 98767586
அத்திவெட்டி ஜோதிபாரதி : 93880086
அப்பாவி முரு :93374002

ஈழத்தமிழர் உரிமைப் போராட்டம் பலமும் பலவீனமும்

மணற்கேணி - 2009 போட்டிக்கு வந்த கருத்தாய்வு ஆக்கங்கள் :
பிரிவு-1: அரசியல் / சமூகம் (அச)
ஈழத்தமிழர் உரிமைப் போராட்டம் பலமும் பலவீனமும்

I. புகுமுன் உங்களோடு ...

ஈழம் என்னும் நிலப்பகுதி தமிழர்களுடையது. இலங்கையும் தமிழ்ச்சொல். இலங்கை முழுவதும் பரவியிருந்த தமிழர்கள் அங்கு ஆட்சி செலுத்தினர்.

காலப்போக்கில் அவர்களது ஆட்சி எல்லை இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் மட்டும் உள்ளதாக மாறியது.

ஈழம் என்று அழைக்கப்பட்ட இலங்கை நாளாவட்டத்தில் சிங்களர் தம் குடியேற்றம் மற்றும் அடக்கு முறையால், வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளை உள்ளடக்கிய தமிழ் ஈழமாகச் சுருங்கியது. சோழ அரசன் ராசராசன் மெய்கீர்த்தியில் முரண் தொழில் சிங்களர் ஈழ மண்டிலமும் என்று தமிழர் பகுதிகளையும்

சிங்களர் பகுதிகளையும் வரையறுத்திருக்கிறது.

மேலும் படிக்க>>>>>>>

எழுதியவர்: டாக்டர் முனியப்பன் ( முனியப்பன் பக்கங்கள்)

மணற்கேணி குழுவினர் சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். கட்டுரைக்கு அவரது பக்கத்தில் உங்கள் கருத்துகளையும் ஊக்கங்களையும் அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

- மணற்கேணி குழு
(சிங்கைப் பதிவர்கள் குழுமம்)

நவீன கால நுண்ணோக்கிகள் (அறிவியல்) !

மணற்கேணி - 2009 போட்டிக்கு வந்த கருத்தாய்வு ஆக்கங்கள் :

பிரிவு-3: தமிழ் மொழி / இலக்கியம் (இல)
(தமிழ் கலைச்சொற்களைப் பயன்படுத்தி ஒரு அறிவியல் கட்டுரை)

நவீன கால நுண்ணோக்கிகள் - மணற்கேணி2009 - பகுதி 1

நவீனகால நுண்ணோக்கிகள்
(Modern day Microscopes)

முன்னுரை:

மனிதயினம், தனது சிந்தனைத்திறன் மூலம் காண்பவை அனைத்தின் மீதும் கேள்விகளைத் தொடுத்து தனது தேடல்களை விரிவாக்கிக்கொண்டிருந்தது, தற்போதும் விரிவாக்கிக் கொண்டிருக்கிருக்கிறது. அப்படி மனிதன் வியந்து போகும் மற்றும் வியந்து கொண்டிருக்கும் அறிவியல் துறைகளுள் ஒன்று “வானவியல்”. தன்னால் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குமேல் அடைய முடியாத மற்றும் கற்பனை செய்யமுடியாத அளவில், பெரிதாயிருந்ததுவும், மனிதன் வானவியலை வியந்து நோக்கியதற்கு முக்கியக் காரணங்களில் ஒன்று. ஆனால், மேலே வானில் விரிகின்ற அதிசயங்களுக்கு இணையாகவும் அல்லது அதற்கு மேலும் ஆச்சர்யமூட்டும் ஒரு உலகு மனிதனின் கண்களுக்குப் புலனாகாத நுண்ணுயிரிகள், அணுக்கள் மற்றும் அணுக்கருத் துகள்களின் உலகம். இப்படி எளிதாக மனிதக் கண்களுக்குப் புலனாகாத உலகம் குறித்த தேடலில் விளைந்த ஒரு அரிய கண்டுபிடிப்பே நுண்ணோக்கிகள் (microscopes). மேலும் படிக்க ...


நவீன கால நுண்ணோக்கிகள் - பகுதி 2

ஈ. நவீன நுண்ணோக்கிகள்

20ஆம் நூற்றாண்டின் துவக்க காலங்கள் நவீன இயற்பியலில் மிகவும் குறிப்பிடத்தகுந்த ஆண்டுகாலம் எனலாம். பொருண்மை, ஆற்றல், அணு எனப் பல விடைதெரியா புதிர்களுக்கு விடைகள் கிடைத்த காலம் 20ஆம் நூற்றாண்டின் துவக்க காலம் எனலாம். இன்றைக்கு இயற்பியலில் கோலோச்சிக்கொண்டிருக்கும் பிந்து சித்தாந்தத்தின் (Quantum Theory) துவக்க காலங்கள் அவை. மேலும், அறிவியலின் தேடல், நுணுகிய பொருட்களுக்குள் புகுந்து அவற்றின் உலகைக் கண்டு இரசிக்கத் துவங்கியிருந்த காலம். அணுவே உலகின் மிகச்சிறிய துகள் என்று மனிதன் எண்ணியிருந்தது உடையத் துவங்கிய காலம். அணுவிற்குள்ளும் அதனினும் சிறிய துகள்கள் உண்டு எனப் புரியத் துவங்கியது. மேலும் படிக்க ...


எழுதியர் கையேடு

*****

பதிவர் திரு கையேடு அவர்களுக்கு மணற்கேணி குழுவினர் சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். கட்டுரைக்கு அவரது பக்கத்தில் உங்கள் கருத்துகளையும் ஊக்கங்களையும் அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

- மணற்கேணி குழு
(சிங்கைப் பதிவர்கள் குழுமம்)

மணற்கேணி - 2009 அடுத்தது என்ன ?

சிங்கைப் பதிவர்கள் மற்றும் தமிழ்வெளி இணைந்து நடத்திய "மணற்கேணி - 2009" கருத்தாய்வுப் போட்டியில் மிக ஆர்வமுடன் பங்கேற்று கட்டுரைகள் அனுப்பிய அனைவரையும் மணற்கேணிக் குழு மிகவும் பாராட்டி நன்றி தெரிவித்துக் கொள்கிறது

இன்று முதல் கட்டுரை அனுப்பியவர்கள் அந்தக் கட்டுரைகளை தங்களது வலைத்தளத்தில் வெளி இடலாம்.

போட்டி முடிவுகள் நவம்பர் திங்கள் இறுதிக்கு முன் வெளி ஆகிவிடும். கிடைத்திருப்பது அனைத்துமே சிறப்பான கட்டுரைகள் ஆகையால் அவற்றை சீர்த்துக்கிப் பார்த்து மதிப்பீடு செய்யும் தகுதியானவர்கள் மூலம் கட்டுரைகள் படிக்கப்பட்டு மதிப்பெண்கள் இடப்படும்.

போட்டியின் முதல் மூன்று பரிசுகள் தவிர்த்து அனைத்துக் கட்டுரைகளுக்கும் சிறப்புப் பரிசுகள் அளிக்க மணற்கேணிக் குழுவினரால் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளதை இங்கே மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

50 கட்டுரைகள் வரை கிடைத்த அனைத்துமே மிகவும் தரமானவை என்பதால் போட்டியின் நோக்கம் மிகச் சரியாக நிறைவேறி இருப்பதுடன், பங்கேற்றப் பதிவர்களின் உழைப்பும் அதில் அடங்கி இருந்ததிலிருந்து அறிந்து கொண்டிருக்கிறோம்.

இந்த வரவேற்பு எங்கள் குழுவை அடுத்த ஆண்டு மேலும் மற்றொரு மாறுபட்ட போட்டி நடத்த ஊக்கப்படுத்தி இருப்பதையும் இங்கே மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

போட்டியில் இணைந்து செயல்பட்ட தமிழ்வெளி இணையதளம் மூலம் கிடைத்த விளம்பரங்கள் போட்டி பற்றி மிக முழுமையான தகவல்களை பரப்புவதற்கு வழிவகை ஏற்படுத்தி நல்ல பயனளித்துள்ளது. பல்வேறு திரட்டிகள் இது போல் பதிவர்களுடன் இணைந்து செயல்படும் போது திரட்டிகளுக்கும் பதிவர்களுக்குமிடையேயான ஒத்துழைப்பும் புரிந்துணர்வும் மேலும் வளரும் என்பது மெய்ப்பட்டு இருக்கிறது.

மணற்கேணி - 2009 தொடர்பான விளம்பரங்களை வெளியிட்ட அனைத்துத் திரட்டிகள், இணைய இதழ்கள் ஆகியவற்றிற்கு நன்றி தெரிவித்துக் கொள்வதுடன், அந்த விளம்பரங்கள் தமிழ்வெளி மூலம் தங்கள் பதிவுகளில் இணைக்கப்பட்டதை ஏற்றுக்கொண்ட பதிவர்கள் பலருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

மணற்கேணித் தொடர்பான தகவல்கள், செய்திகள், கட்டுரைகள் ஆகியவற்றைப் பாராட்டியவர்கள், படித்தவர்கள் மற்றும் இது பற்றிய இடுகைகள் வெளிட்டவர்கள் அங்கு பின்னூட்டமிட்டு ஆதரித்த அனைவருக்கும் நன்றிக் கூறிக் கொள்கிறோம்.

கேட்டவுடன் மணற்கேணி - 2009 இலச்சினை செய்து கொடுத்த பதிவர் நண்பருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வெற்றியாளர்களுக்கு பரிசுகள் அறிவித்தப் பிறகு.....அடுத்தப் போட்டி அறிவுப்பு உங்களுக்காக, உங்களைத் தேடி வரும்.

போட்டியில் பங்கு பெற்றவர்கள் பற்றிய விவரங்கள் அடுத்த அறிவிப்புகளில் வெளிவரும்.

அனைவருக்கும் மீண்டும் நன்றி நன்றி நன்றி !

சிங்கையில் லேசான நில அதிர்வு !

ஐந்து நிமிடங்களுக்கு முன் சிங்கையில் லேசான நில நடுக்கம் உணரப்பட்டது. எனது இருக்கை லேசாக அசைய .... அருகில் அமர்ந்திருந்த மற்றொரு சீனப் பெண் 'ஷேக்கிங்க்....ஷேக்கிங்க்' என்று குரல் எழுப்பினாள்.

ரிக்டர் அளவு விவரம் தெரியவில்லை.

கிட்டதட்ட அது பற்றிய தகவல் இங்கே


இந்தோனிசியா சுமத்திரா தீவு அருகில் அடிக்கடி நில நடுக்கம் / அதிர்வு ஏற்படும், அது சற்று பெரியதாக இருக்கும் போது சிங்கையிலும் உணரப் படும். சுனாமி எச்சரிக்கை விடப்படுமா என்கிற தகவல் இனிமேல் தான் வெளியாகும்.

எதற்கும் தமிழக கடற்கரைப் பகுதிக்கு செல்பவர்களை தவிர்க்கச் சொல்லுவோம்.

முழுத்தகவல் தற்பொழுது வெளியாகி இருக்கிறது

இன்றே இப்படம் கடைசி - மணற்கேணி 2009 போட்டி



தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு
- திருக்குறள் - 396


சிங்கப்பூர் வலைப்பதிவர்கள் மற்றும் தமிழ்வெளி இணையதளம் இணைந்து நடத்தும் கருத்தாய்வு போட்டி மணற்கேணி 2009 ற்கான போட்டி ஆக்கங்கள் அனுப்ப வேண்டிய கடைசி நாள் இன்று. உங்கள் கட்டுரைகளை இன்றே அனுப்பி போட்டியில் பங்களிக்க வேண்டுகிறது மணற்கேணி 2009 நிர்வாக குழு.

இது பற்றிய முழு தகவல்கள் பெற இங்கே சுட்டவும் http://www.sgtamilbloggers.com/

சேரனுக்கு எதிராக தொடுக்கப்பட்ட அம்பு !

நேற்று சிங்கப்பூர் கவிமாலை கவிஞர்களின் 2009 கவிதைத் தொகுப்பு விழா சிங்கப்பூர் தேசிய நூலகத்தில் நடந்தேறியது. அது பற்றியப் புகைப்படத் தொகுப்புகளையும் விவரங்களையும் வலைப்பதிவர் மற்றும் கவிஞர் பாண்டித்துரை எழுதுவார்.



விழாவுக்கு சிறப்பு விருந்தினராக இயக்குநர் மற்றும் நடிகரான சேரன் வரவழைக்கப்பட்டு இருந்தார். பெரும்பான்மை, நடுத்தரவர்கத்தினரின் ஏக்கங்களைச் சாடியும், அறிவுரை கூறியும் படமெடுக்கும் சேரன் இலக்கிய விழாக்களுக்கு பொருத்தமானவராக என்பதை என்னால் சரியாக முடிவு செய்து சொல்ல முடியவில்லை. ஆனால் தமிழ் வளர்ச்சிக்கு தமிழர்கள் ஆற்றவேண்டியவை என்ன என்ன என்பதைப் பற்றி அவரைப் பேசச் சொல்லி இருந்தார்கள், அவர் பேச்சில் இருந்து அது பற்றிப் பேச அவர் பொருத்தமானவர் இல்லை என்பது நன்றாகத் தெரிந்தது. சேரன் திரைப்பட தமிழ் பட இயக்குனர் என்பதைத் தாண்டி தமிழ் பற்றாளர் என்பது போல் அவரது படங்கள் எதிலும் அவர் தமிழ் குறித்து தனது எண்ணங்களை வெளிப்படுத்தியவர் இல்லை. தமிழ் மட்டுமே தெரிந்ததால் திரைத்துறையில் நுழைந்த காலகட்டங்களில் தான் நிராகரிக்கப்பட்டதாகச் சொன்னார்,

அது போல் தமிழ் மட்டும் தெரிந்ததால் தனது சிந்தனைகள் எப்படிப் பட்டதாக இருந்தது என்பதாகச் சொன்னார். தமிழ் தொடர்ந்து வாழ எதாவது சொல்லுவார் போல என்று எதிர்பார்த்த பலருக்கு ஏமாற்றம். 'தமிழ் மொழி அழிந்துவிடாமல் இருக்க, உறவுகளைத் தமிழில் இருக்கும் பெயரைச் சொல்லியே அழைத்துப் பழகுங்கள், அம்மா அப்பா என்பதை மம்மி டாடி ஆக்கிவிடாதீர்கள்' என்று கூறி தமிழ் குறித்த தனது எண்ணங்களை மிகவும் எளிமையாக முடித்துக் கொண்டார். ஒரு இயக்குனராக தமிழ் திரைப்படங்கள் வளர்ச்சிகளை பிற மொழிப் படங்களுடன் ஒப்பிட்டுப் பேசி இருந்தால் கூட ஆறுதலாக இருந்திருக்கும், தமிழ் மொழியின் தேவை உணர்த்த வேண்டிய இடத்தில் தமிழுக்கு எதிராக பேசாவிட்டாலும் தமிழ் மட்டுமே தெரிந்ததால் தான் அவமானப்பட்டதாகக் கூறியதெல்லாம் மறைமுகமாக தமிழ் பற்றாளர்களை துவண்டுவிடச் செய்யும் பேச்சுகளாக அமைந்தது. உண்மையைச் சொல்கிறேன், உள்ளதைச் சொல்கிறேன் என்பது பேச வேண்டிய பொருள் குறித்துப் பேசும் போது கொஞ்சம் கவனம் எடுத்துக் கொண்டால் அழைத்தவர்கள் முகம் சுளிக்காமல் இருப்பார்கள். ஒன்றைப் பற்றி உயர்வாகவும் அது பற்றிய ஆக்கப்பூர்வமான சிந்தனைகளைத் தருவார் என்ற நம்பிக்கையில் பேச்சாளர்களாக அழைப்பவர்கள் முகத்தில் கரியைப் பூசும் வண்ணம் அதற்கு எதிராகப் பேசினால் அங்கு உண்மை, உள்ளம் எல்லாம் வீணாகப் போய்விடுகிறது. சேரன் இலக்கிய விழாக்களுக்குப் பொருத்தமானவரா இல்லையா என்பதைவிட தமிழ் கூறும் நல்லுலகு மேம்படக் கருத்துக் கூறும் தகுதி பெற்றவர் அல்ல என்பதாகத் தான் நான் நினைக்கிறேன்.


நிற்க.

நிகழ்ச்சியின் இறுதியில் தன்னிடம் கேள்வி எழுப்புவர்கள் எழுப்பலாம் என்று சேரன் கூற ஒருசிலர் ஆவலுடன் முன்வந்தனர். அதில் பார்வையாளராக வந்திருந்த சசிகுமார் என்பவர்,

"தமிழகத்தில் இருந்து இங்குவருபவர்கள் அனைவருமே (சிங்கையில்) இங்குள்ள சுத்தம் சுகாதாரம் ஊழலின்மையைப் பார்த்துவிட்டு, சிங்கப்பூரை புகழ்வதுடன் நிறுத்திக் கொள்ளாமல் இந்தியாவை மிக மோசமாக பலர் மத்தியில் விமர்சனம் செய்துவிட்டு கைதட்டல் பெறுகிறார்கள்...கைத்தட்டல் பெற வேண்டும் என்பதற்காக மிக மட்டமாகக் கூட விமர்சனம் செய்கிறார்கள், நீங்களும் இங்கே அதைச் செய்தீர்கள்" என்று குற்றச் சாட்டாகக் கூற சேரன் பொங்கி விட்டார், கேள்வி எழுப்பியவரை உண்டு இல்லை என்று பண்ணிவிட்டார்

"நம்ம ஊர் குப்பதான், அதை ஒப்புக் கொள்கிறேன், அந்தக் குப்பையில் தானே நீங்களும் இருந்தீர்கள், அதைச் சொன்னால் ஏன் கோபப்படனும், உங்க வீட்டுக்கு லெட்டர் போடும் போது வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ளச் சொல்லி வலியுறுத்துங்க....வெளி நாட்டுக்குச் செல்வதை விட அதை உழைப்பைக் காட்டினால் உள் நாட்டில் முன்னேராலாம் என்று வெற்றிக் கொடி கட்டு படம் எடுத்தேன், கோவையில் அதைப் பார்த்துவிட்டு வெளி நாடு செல்ல பணம் கட்டிய இளைஞர்கள் திரும்பப் பெற்று சொந்த தொழில் தொடங்கினார்கள்.....என்ன வளம் இல்லை இந்த திரு நாட்டில் ஏன் கையை ஏந்த வேண்டு வெளிநாட்டில்......இந்தியாவைப் பற்றி மட்டமாகப் பேசுகிறேன் என்று தெரிகிறது இல்லையா ஏன் கைதட்டுறிங்க....அதை ஏன் அங்கீகரிக்கிறிங்க... இந்தியாவைப் பற்றி சீனரிடம் சொல்லவில்லையே, மலாய்காரர்களிடம் சொல்லவில்லையே...உங்களிடம் தானே சொல்கிறேன்..." என்பது போல் கேள்வி கேட்டவரையே குற்றவாளி ஆக்கிவிட முனைந்தார்.

சேரன் மட்டுமல்ல, இந்தியாவை மட்டமாக விமர்சனம் செய்யும் பேச்சாளர்கள் சிங்கையில் கைதட்டல் பெறுகிறார்கள், இதில் பேசுபவர்களைவிட அதற்கு கைத்தட்டுபவர்கள் ஏராளம் என்பதும் உண்மை. நாம வந்திருப்பது பிழைக்க, அதில் நாம் செல்லும் ஒரு நாடு நம் கண்ணுக்கு முன்பு சுத்தமாக இருப்பதில் நமக்கு தனிப்பட்ட பெருமையாக நினைக்க என்ன இருக்கிறது என்றே தெரியவில்லை. சேரன் மட்டமாகப் பேசியதும் உண்மை, அது குறித்து கேள்வி எழுப்பியதும் அதை அவர் சமாளித்து கேள்விக் கேட்டவரை மடக்கியது அவர் பேசிய உண்மையை விடக் கசப்பானது.

*****

இதைவிட முதன்மையானத் தகவல், சிங்கைப் பதிவர்கள் - தமிழ்வெளி இணைந்து நடத்தும் மணற்கேணி - 2009 கட்டுரைகள் பெருவதற்கு இன்னும் 28(இன்று), 29 (நாளை), 30(நாளை மறுநாள்) என மூன்றே நாட்கள் உள்ளன. ஏற்கனவே எழுதி வைத்திருந்து இன்னும் முழுமை அடையாமல் இருந்து, நிறைவு செய்யாமல் இருந்தால் உடனே நிறைவு செய்து அனுப்புங்கள்.

இன்னும் 2 - 3 நாட்கள் இருப்பதால் புதிதாக எழுதி அனுப்புவதைப் பற்றி கட்டுரையாக்கங்கள் எழுதி அனுப்பாதோர் முயற்சிக்கலாம்.

Moon Cake Festival

சிங்கையைப் பதிவர்களுடன் சுற்றிப் பார்க்கும் அரிய வாய்ப்பு, பயன்படுத்திக் கொள்ளும் அனைவருக்கும் மிக்க நன்றி. இன்னும் மூன்றே நாட்கள் மீதம் உள்ளன.

ஞான பித்தன், ஜோதி பாரதி, முகவை இராம்குமார் மற்றும் பாண்டித்துரை

முழுவிவரங்களுக்கு : மணற்கேணி - 2009

மணற்கேணி - 2009 மறுதேதி அறிவிப்பு !

மணற்கேணி -2009 போட்டி ஆக்கங்கள் அனுப்ப நிறைவு நாள் என்று ஆகஸ்ட் 15 ஆம் தேதி என முடிவு செய்து அறிவித்து இருந்தோம். சில பல தவிர்க்க முடியாத காரணங்களினால் கட்டுரையை பதிவர்கள் அனுப்பும் நிறைவு நாளாக செப்டம்பர் 30, 2009 மாற்றிய அமைக்கப் படுவதாக மணற்கேணி -2009 குழுவினரால் முடிவு செய்யப்பட்டுள்ளது.

பல நண்பர்களிடமிருந்து கட்டுரை பெறும் நிறைவு நாளை நீட்டிக்கச் சொல்லி வேண்டுகோள் மின் அஞ்சல் வந்ததாலும், பல நண்பர்கள் ஆக்கங்களுக்கு தேவையான தகவல் திரட்டுவதில் முனைந்திருந்ததாலும் எழுதுவதற்கு நேரம் கிடைக்கவில்லை, ஆக்கங்கள் பெறும் நிறைவு தேதியை மறுபரீசீலனை பண்ணுமாறு கேட்டு இருந்தார்கள்.

மேலும் தேதி மாற்றம் எதுவும் இல்லை என்று உறுதியாக முடிவு செய்து, கருத்தாய்வு (கட்டுரை) ஆக்கங்கள் அனுப்ப வேண்டிய நிறைவு நாள் 30 செப்டம்பர் 2009 என்று ஒரு மனதாக இறுதி செய்யப்பட்டுள்ளது.

மீண்டும் நினைவு படுத்துகிறோம்,

மொத்தம் 29 தலைப்புகளில் உள்ள மூன்று பிரிவுகளிலும், ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட தலைப்புகளில் தலைப்புக்கு ஒன்றாக 29 ஆக்கங்கள் வரை ஒருவரே அனுப்பலாம்.

ஒரே தலைப்புக்கு ஆக்கங்கள் அனுப்பினாலும் அனுப்பலாம். சிறந்தது தேர்ந்தெடுக்கப்படும்.

போட்டித் தொடர்பான சுட்டிகள் :

போட்டி குறித்த விரிவான அறிவிப்பு

போட்டி குறித்து அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

போட்டி விதிமுறைகள்

போட்டித் தலைப்புகள்

போட்டித் தொடர்பில் தகவல் பெற


விரைவில் ஆக்கங்களை அனுப்பி நல் ஆதரவு தருமாறு வேண்டிக் கொள்கிறோம்.

மணற்கேணி -2009 சிங்கைப் பதிவர்கள் குழு சார்பாக,
கோவி.கண்ணன்

சிங்கை தமிழ் பதிவர்கள் – இலக்கிய ஆர்வலர்கள் கூட்டம்.

சிங்கைவாழ் தமிழ் ஆர்வலர்களுக்கு இன்றைய நாள் மிக இனிய நாளாக அமைந்தது என்றால் மிகையாகாது. சிங்கைப் பதிவர்கள் வாராந்திர, மாதாந்திர கூட்டங்களைக் கூட்டி, பல முக்கிய முடிவுகளை எடுத்து, மணற்கேணி, சிங்கை நாதன் அண்ணுக்கான உதவி போன்றவற்றை மிகச் சிறப்பாக செயல்படுத்தி வருவது எல்லோருக்கும் தெரிந்ததே…

அந்த வரிசையில் சிங்கையில் வெகுசிறப்புடன் செயல்பட்டு வரும் தமிழ் இலக்கிய ஆரவலர்களைச் சந்தித்து, அவர்களுக்கு நமது பதிவுலகத்தினை அறிமுகம் செய்து அவர்கள் அனைவரையும் பதிவர்களாக்கி, தமிழ் வலையுலகினை மென்மேலும் சீர்படுத்த வேண்டும் என்ற ஆர்வத்துடன் இன்றைய (23 ஆகஸ்ட்) கூட்டத்தினை ஏற்பாடு செய்து, பதிவர்களுக்கும், இலக்கிய ஆர்வலர்களுக்கும் பாலமாக இருந்தார் பதிவர் பாண்டித்துரை அவர்கள்.


மிகச்சரியாக மாலை மணி 4.30க்கு அங் மோ கியோ வட்டார நூலகத்தில் உள்ள தக்காளி அறை (TOMOTTO ROOM)-யில் கூட்டம் களைகட்ட ஆரம்பித்தது. கூடி இருந்த மக்களுக்கு முதலில் சுவையான சூடான வடை மற்றும் தேநீர் பரிமாறப்பட்டு அனைவரையும் இருக்கையில் அமரவைத்து கூட்டம் ஆரம்பமானது.

முதலில், கூட்டத்திற்கு இடஉதவி கொடுத்ததோடு மற்றுமில்லாமல் கூட்டம் முடியும் வரை உடனிருந்து உதவிகள் புரிந்த, இணை நூகலர் நிர்மலா அவர்களுக்கு நன்றி தெரிவித்தபின், பதிவர்களின் அறிமுகம் ஆரம்பமானது.












குழலி, கோவிகண்ணன், ஜோசப் பால்ராஜ், அப்பாவி முரு, முகவை ராம், ஜெகதீசன், பித்தன் ஜி, ராம் சி.எம், ஞானசேகரன் தங்களையும், தங்களின் பதிவுகளையும் தாங்கள் விரும்பி எழுதும் தலைப்புகளைப் பற்றியும் அறிமுகம் செய்யப்பட்டது.
பின் அனைத்து தமிழ் இலக்கிய ஆர்வலர்களுக்கு எட்டாயிரத்திற்கும் மேற்பட்ட பதிவர்கள் இருக்கும் தமிழ் பதிவுலகத்தையும், பத்திற்கும் மேற்பட்ட திரட்டிகளையும் தமிழ் எழுத்து மென்பொருள்களையும், புதிதாக Blogger, Wordpress போன்றவற்றில் எவ்வாறு தளத்தினை ஆரம்பிப்பது என்பது போன்ற தொழில்நுட்பங்கள் மிக எளிதாக செய்முறையாக குழலி, கோவிகண்ணன் அவர்களால் விளக்கப்பட்டது.













இலக்கிய ஆர்வலர்களின் கேள்விகளுக்கு அனைத்து பதிவர்களாலும் தங்களின் அனுபங்களையே விளக்கமாக கொடுத்ததும் அனைவரின் முகத்திலும் இலக்கிய ஆர்வத்திற்கும் மேல் இணைய ஆர்வம் முளை விட்டதை கண்கூடாக் கண்டு வந்துள்ளோம். இன்னும் சில நாட்களிலேயே சிங்கையிலிருந்து இன்னும் பல தரமான பதிவர்கள் நம் உலகினில் நுழையப்போவது உறுதி.

டிஸ்கி 1:
சிங்கைநாதனின் இதயநோயினைப் பற்றியும், அவரின் தற்போதைய உடல்நலத்தினைப் பற்றியும், அவருக்காக பதிவுலகம் இதுவரை சேர்த்துள்ள தொகையினைப் பற்றியும் முழு விளக்கத்தையும் சகபதிவர் ஜோசப் பால்ராஜ் மிகத்தெளிவாகக் கொடுத்தார். அதோடு மட்டுமில்லாது, தயக்கமேதும் இல்லாமல் நம் சிங்கைவாழ் தமிழ் இலக்கிய ஆர்வலர்களிடமும் உதவியினை கேட்டு, பொருளையும் ஆலோசனைகளையும் பெற்று வெற்றியோடு திரும்பியது நம் பதிவர் குழு.

டிஸ்கி 2:
பதிவுலகை மிக எளிமையாகவும், தெளிவாகவும் விளக்கிய பதிவர்களுக்கு அன்பளிப்பாய் பொக்கிசங்கள், இலக்கிய ஆர்வலர்களால் வழங்கப்பட்டது ...










நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த திரு பாண்டித்துரை மற்றும் சிங்கை வாசகர் வட்டக் குழுவினர்கள் அனைவருக்கும் நன்றி.

சிங்கை வாசகர் வட்டம் மற்றும் பதிவர்கள் ஒன்று கூடல் அறிவிப்பு !

சிங்கை நூலக வாசகர் வட்டம் (கவிஞர்கள், எழுத்தாளர்கள், வாசகர்கள்) மற்றும் சிங்கைப் பதிவர்கள் ஒன்று கூடல் இந்த ஞாயிற்றுக் கிழமை (23/ஆகஸ்ட்/2009) நடக்க இருக்கிறது,

நிகழ்சிக்கு தலைமை ஏற்பு கவிஞர் பாண்டித்துரை.
நிகழ்ச்சி ஏற்பாடு : சிங்கை வாசகர் வட்டம்.

நிகழ்ச்சி பற்றிய முழு விவரங்கள்:

இணையப் பெருவெளியில் சிங்கைவாழ் தமிழர்கள்

நாள்: 23.08.2009 (ஞாயிறு)

நேரம்: மாலை 4.30மணிக்கு

இடம்: அங்மோ கியோ வட்டார பொது நூலகம்



தக்காளி அறை (இரண்டாவது தளம்)

இருவர் சந்திக்கும்போது தான் காதல், காமம், குரோதம், என ஒன்றிலிருந்து ஒன்று மாறுபட்டு இந்த பிரபஞ்சம் மெல்ல விரிவடைகிறது.

இவர்களும் சந்திக்கிறார்கள,; விரல் நுனிக்குள் சுருங்கிவிட்ட இணையப் பெருவெளியில் சந்திப்பதுடன் சிந்திக்கவும் செய்கிறார்கள். அறிவியல், ஆன்மீகம், இலக்கியம், அரசியல், சமூகம், மொழி, பண்பாட்டுடன் நட்பின் கரங்களை உயர்த்திப் பிடிக்கும், இவர்களின் இணைய உலக பயண எழுத்தின் நுட்பத்துடன் சந்தித்த தளங்களை…..

சிங்கைவாழ் பதிவர்களான

கோவி.கண்ணன் அவர்கள்

குழலி அவர்கள்

அப்பாவி முருகேசன் அவர்கள்

முகவை ராம் அவர்கள்

ஜோசப் பால்ராஜ் அவர்கள்

பதிவர் உலகம், வலைப்பதிவுகள், திரட்டிகள், பதிவர் வட்டம் பற்றிய தகவல்களைப் பகிர்ந்து கொள்கின்றனர்.

இவர்களுடன் 15-ற்கும் மேற்பட்ட வலைதள எழுத்தாளர்கள் இந்த சந்திப்பில் கலந்து கொண்டு கலந்துரையாடலிலும் பங்கு பெறவிருக்கின்றனர்.

அனுமதி இலவசம், பதிவர்கள் வாசகர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம்.

அன்புடன் அழைப்பது,

சிங்கை நூலக வாசகர் வட்டம் நண்பர்கள் மற்றும்
சிங்கைப் பதிவர்கள்

மூன்றே வார்த்தை சிங்கப்பூர் வளர்ச்சியின் மந்திரசொல்....

மூன்றே வார்த்தை சிங்கப்பூர் வளர்ச்சியின் மந்திரசொல்....


உலக நாடுகளிலேயே எந்த நேரமும் செயல்ப்பட்டுக்கொண்டிருக்கும் நகரம் என்றால் அது சிங்கப்பூர் என்றே சொல்லலாம். தற்போழுது நாம் பார்க்கும் சிங்கப்பூர் ஏதோ திடீர் என குதித்துவிட்ட நாடு இல்லை. சிங்கப்பூரும் மற்ற நாடுகளை போல பல படிகளை கடந்துதான் இந்த நிலையை தொட்டுயுள்ளது. இந்த புதிய சிங்கப்பூரை உருவாக்கிய பெருமை பெரும் பகுதியை முன்னால் பிரதமரும் இன்று மூத்த அமைச்சருமாய் உள்ள திரு. லீ குவான் யூ வை சாரும்.

சிங்கப்பூர் ஒரு தீவு நகரம். ஒரு காலத்தில் சிங்கப்பூர் ஒரு மீன் பிடி நகரமாக இருந்தது. சிங்கப்பூர் நதியை ஒட்டி இருக்கும் இடம் மீன் பிடிப்பதற்கு ஏற்றாற்போல் அழகாகவும், அற்புதமாகவும் அமைந்து இருக்கிறது. ஆனால் இன்று ஒரு மிக பெரிய வர்த்தக மையமாக திகழ பிரித்தானியா காலனித்துவமும் ஒரு காரணம். சிங்கப்பூர் ஒரு சிறந்த வர்த்தக மையமாக திகழ்வதற்கு 1889 ம் ஆண்டு ஆங்கிலேய கிழக்கிந்திய நிறுவனத்தை (British East India Company) வழிநடத்திய சார் ஸ்டாம்போர்ட் ராபிள்ஸ் (Sir Stamford Raffles) ஒரு வர்த்தக மையத்தை சிங்கப்பூரில் நிறுவினார். இதுதான் சிங்கப்பூரின் வளர்ச்சிக்கு வித்தாக அமைந்தது என்றே சொல்லலாம்.

1942 க்கு முன் சிங்கப்பூர் ஆங்கிலேய ஆதிக்கத்தின் கீழ் இருந்தது. அதற்கு பின் ஏற்பட்ட ஜப்பானியரின் படையெடுப்பால் சிங்கப்பூர் ஜப்பானியரின் வசம் வந்தது. சிங்கப்பூர் பிரித்தானியாஅரசாட்சி அடிபடையாக கொண்டது. அதனால் அதனை அனைவரும் ஆசியாவின் கிப்ரல்டார் (Gibraltar of the East) என்றே அழைத்தனர். அதிர்ச்சி தரும் விதமாக ஜப்பானியர்கள் தங்களின் காலனித்துவ மற்றும் பேரரசு சாம்ராஜியத்தை எட்டு, ஒன்பது நாட்களிலேயே செயல்படுத்தினர். அதாவது, 1942 ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 7 ம தேதி முதல் 1942 ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 15 ம் நாள் வரை ஆகும். சிங்கப்பூர் யுத்தத்தில் கிழகத்திய நிறுவன இராணுவம் சரணடைந்தது மிக பெரிய தோல்வி என கருதப்பட்டது. பிரித்தானியா வரலாற்றில் ஜப்பானியர்களிடம் சிங்கப்பூர் தொல்வியுற்றதே மிகபெரிய இழப்பு என சர்ச்சில் (Churchill ) கூறினார். அதற்கு பின் சிங்கப்பூர் ஜப்பானியரின் வசம் இருந்தது..

இன்று நாம் பார்க்கும் சிங்கப்பூர் குடியரசு 1965 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9 ஆம் தேதி சிங்கப்பூர், மலேசியக் கூட்டமைப்பில் இருந்து விலகி இறையான்மையுள்ள நாடானது. இந்த நாளைதான் சிங்கப்பூர் பிறந்தநாளாக கொண்டாடி வருகின்றனர். சென்ற 9ம் தேதியில் சிங்கப்பூர் தனது 44 வது பிறந்த நாளை கொண்டாடியது நாம் எல்லோருக்கும் தெரிந்ததே.


1965 ஆகஸ்ட் 9 ம் நாளுக்கு பிறகு உள்நாட்டு குழப்பகளை எல்லாம் சமாளித்து ஒரு புதிய குடியரசாக உருவாக்கியவர் சிங்கப்பூரின் தந்தை என புகழப்படும் திரு. லீ குவான் யூ . இவர் நாட்டு மக்களுக்கு கொடுத்த மந்திரம்தான் இன்றைய அளவில் மிக சிறப்பாகவும் இன்றும் கடைப்பிடிக்கப்பட்டும் வருகின்றது. நாட்டு மக்களிடம் திரு. லீ குவான் யூ " நீங்கள் மற்றவர்களிடம் கனிவாக பழகுங்கள் நீங்கள் எப்பொழுதும் பயன்படுத்தும் வார்த்தைகளில் நன்றி (Thank you), தயவுசெய்து (Please). மன்னிக்கவும் (Excuse me) சொல்லுங்கள். அதை இன்றுவரை காரணம் கேட்காமல் சிங்கபூர் மக்கள் பயன்படுத்தி வருகின்றார்கள். இந்த நல்ல பண்புதான் இன்றைய சிங்கப்பூரை உலகில் சிறந்த வர்த்தக தளமாக மாற்றியுள்ளது என்றால் மிகையாகாது.

ஒரு முறை நான் நண்பர்களுடன் பெங்களூர்க்கு சென்றேன். அங்கு சந்தையில் தோல்பை வாங்க வேண்டும் என்று என் நண்பன் கடைக்கு சென்றான். நானும் கூடவே சென்றேன். "தோல்பை என்ன விலை?" என்று என் நண்பன் கடைக்காரனிடம் கேட்டான். விலையை சொன்னதும் தனது தகுதிக்கு விலை அதிகம் என்று நினைத்து விளகினான். ஆனால் கடைக்காரன் விடுவதாய் இல்லை " என்ன விலைக்கு நீ எடுத்துக்கொள்வாய் சொல்லுங்கள்? " என்று வீம்பு பண்ணினான். வேறு வழியின்றி அந்த தோல்பையை வாங்க வேண்டிதாயிற்று. இந்த நிலைமைதான் அனேக இந்திய நகரங்களில் என்று நினைக்கின்றேன். மக்கள் தொகை அதிகமும் மக்களின் தேவைகள் அதிகமும் இருப்பதால்தான் இவர்களின் வியாபாரம் நடந்துக்கொண்டுள்ளது. இவர்களின் நேர்மைக்காகவோ பண்புக்காகவோ இல்லை. அந்த நிலை இன்று மாறி வருகின்றது என்றாலும் இன்னும் முழுவதும் மாறவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். இப்படிப்பட்ட நிகழ்வுகள் சொல்வதற்கு நிறையவே இருக்கு.

இன்றைக்கும் சிங்கப்பூருக்கு வந்து எல்லா நாட்டவரும் வர்த்தகம் செய்கின்றார்கள் என்றால் இவர்களின் பண்பும் ஒரு காரணம். எந்த ஒரு சிறிய வியபாரமாகட்டும் நன்றி சொல்ல தவறுவதில்லை. அதே போல் விலையில் ஏமாற்றம் என்பது இல்லைவே இல்லை. சிறிய கடையாக இருந்தாலும் விலை வில்லை இருக்கும். ஒரு முறை நான் தங்க செயின் வாங்க சென்றேன். கடையில் உள்ள சீன பெண் என் கழுத்தில் செயினை அவளே போட்டுவிட்டு "உங்களுக்கு அழகாக இருக்கு எடுத்துக்கொள்ளுங்கள் என்றாள்". என் மனைவி அதை பார்த்துவிட்டு அதிர்ந்தே போய்விட்டாள். அந்த அளவிற்கு வியாபார தந்திரம் என்று சொல்வதைவிட வியாபார கவர்ச்சி என்றே சொல்லலாம். நன்றி சொல்லாத வியாபாரத்தை நான் பார்த்ததே இல்லை.

இந்த பண்புகள் இன்னும் நம் நாடுகளில் வரவில்லை என்பது ஒரு குறைதான் என்றாலும் இதுபோன்ற பழக்கங்களை நாம் இங்கிருந்து எடுத்து செல்வதில் குற்றமில்லையே!.

இப்படிப்பட்ட சிங்கப்பூருக்கு வந்துசெல்ல ஒரு நல்ல வாய்ப்பு மூவருக்கு மணற்கேணி 2009 தருகின்றது. அதைவிட இணைய எழுத்தாளர்களுக்கு ஒரு அங்கிகாரம் இருக்கு என்று நிறுபிக்கும் ஒரு சந்தர்ப்பமும் கொடுக்கின்றது. நீங்கள் அதற்காக செய்யவேண்டியது ஒரு சிறந்த கருத்தாழமிக்க கட்டுரைகளே!
சிங்கை பதிவர்கள் மற்றும் தமிழ்வெளி.காம் இணையதளம் நடத்தும் மாபெரும் கருத்தாய்வு போட்டி

இந்த மணற்கேணி 2009 நண்பர்களின் வேண்டுகோள்கிணங்க கடைசி தேதியும் ஒத்திவைத்துள்ளது. மேலும் விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும். இந்த அறிய வாய்ப்பை நண்பர்கள் பயன்படுத்திக்கொள்ள சிங்கை தமிழ்ப் பதிவர்கள் குழுமம் சார்பாகவும், தமிழ்வெளி சார்பாகவும் அன்புடன் வேண்டுகின்றேன்...


சிங்கைப் பதிவர்கள் குழுவிற்காக
ஆ.ஞானசேகரன்.
Manarkeni 2009

சிங்கப்பூர் வரலாற்று புகைப்படங்கள் சில கீழேயுள்ளது..










Blogger template 'Fundamental' by Ourblogtemplates.com 2008.

Jump to TOP