"மணற்கேணி - 2010"

Manarkeni 2009  More than a Blog Aggregator

ஏரிக்கரையும் சுற்றியுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளும் (சுட்டவை சிங்கப்பூர் ஏரிக்கரை 07.10.2010)

ஏரிக்கரையும் சுற்றியுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளும் (சுட்டவை சிங்கப்பூர் ஏரிக்கரை 07.10.2010)

சிங்கப்பூர் வந்து சென்றவர்களுக்கு பசுமைமாறா நினைவுகளாக இருப்பது பல இருந்தாலும். என்றுமே அவர்களின் நினைவிக்குள் வருவது சுற்றியுள்ள பசுமைகள்தான். எங்கு பார்த்தாலும் ஓங்கி வளர்ந்த மரங்கள், பச்சை பாய் விரித்தது போன்ற புள்வெளிகளும். இந்த பசுமைக்கு காரணங்கள் இங்குள்ள இயற்கை சூழல்கள் ஒரு புறமிருக்க அரசும் அதன் கடமையை செய்கின்றது. இங்குள்ள பூக்களை பறிப்பது சட்டப்படி குற்றமாகும். அதேபோல பராமிப்பின்றி வளரும் புல் புதர்களுக்கும் அனுமதியும் இல்லை. அப்படி வளரும் இடத்தின் நிர்வாகதிற்கு அபராதம் (தண்டம்) வசூலிக்கப்படும். சிங்கப்பூர் ஏரிக்கரை (Lake side) என்ற இடத்தின் சுற்றியுள்ள இடங்களை சுட்டுதள்ளிய சில புகைப்படங்கள் உங்களின் பார்வைக்கு வைத்துள்ளேன்......


























மேலேயுள்ள புகைப்படங்களை பார்த்திருப்பீர்கள். இது போன்ற இடத்திற்கு ஒரு முறையாவது சென்று வந்தால் நல்லது என்ற எண்ணங்கள் இருக்கலாம். கவலைவிடுங்கள் அதற்கான வாய்ப்பு உங்களை தேடி வந்துள்ளது. நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான்...... ஆழ்ந்து சிந்தித்து கருத்தாய்வு செய்தவையை எழுதி அனுப்பினால் போதும்.

அட ஆமாங்க
...........

சிங்கை பதிவர்கள் மற்றும் தமிழ்வெளி.காம் இணையதளம் நடத்தும் மாபெரும் கருத்தாய்வு போட்டி

சென்ற ஆண்டை போன்று இந்த ஆண்டும் “மணற்கேணி- 2010” சிறப்பாக நடத்த திட்டமிட்டுள்ளார்கள். அதற்காண தலைப்புகள் மற்றும் விதிமுறைகளை பார்க்க கீழ்யுள்ள நிரலியை சுட்டுங்கள். தலைப்புகள் மூன்று பகுதியாக கொடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதிக்கும் ஒருவர் என மூவருக்கு சிங்கப்பூர் சென்று வர வாய்ப்புகள் உள்ளது. நிரலியை சுட்டுங்கள் தட்டி செல்லுங்கள் அறிய வாய்ப்பை..........

மணற்கேணி குழுவின் அனைத்து தகவல்களுக்கான இணைய தளம்

போட்டியில் இணைந்து பங்காற்றும் தமிழ்வெளி

மணற்கேணி குழுவின் வலைப்பூ

அனைத்து விதிமுறைகளை அறிய நிரலியை தட்டுங்கள்

Photobucket


அன்புடன் (சிங்கப்பூர் தமிழ்ப் பதிவர்கள் குழுமத்திற்காக)
ஆ.ஞானசேகரன்.

எழுதுங்கள்! வெல்லுங்கள்!......

அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த மணற்கேணி - 2010 குறித்த அறிவிப்புகள் !

பதிவர்கள் மற்றும் எழுத்து ஆர்வலர்கள் ஆவலுடன் எதிர்நோக்கிய சிங்கப்பூர் தமிழ் வலைப்பதிவர்கள் மற்றும் தமிழ்வெளி இணைய தளம் இணைந்து நடத்தும் மணற்கேணி 2010 பற்றிய அறிவிப்புகளை இன்று வெளி இடுவதில் பெருமை கொள்கிறோம்.

போட்டித் தலைப்புகள் இங்கே

சென்ற ஆண்டைப் போல் இல்லாமல் இந்த முறை எளிமையான தலைப்புகளில் கட்டுரை தலைப்புகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதனை சரியாகப் பயன்படுத்தி கட்டுரைகளை எழுதிக் குவித்து பேராதரவு தந்து போட்டியில் வெற்றிபெருமாறு வாழ்த்துகிறோம்

போட்டிக்கான ஆக்கங்கள் வந்து சேர இறுதி நாள் : நவம்பர் 15, 2010 23:59:59 (இந்திய/இலங்கை நேரம்)

போட்டிகள் இன்று துவங்கி கிட்டதட்ட 40 நாட்கள் நடக்கின்றன. 40 நாட்கள் என்பது கட்டுரைகளின் தலைப்பை ஒட்டி பல்வேறு தகவல்களை திரட்டவும், எழுதிய கட்டுரையை நன்கு சீரமைத்து அனுப்ப போதிய காலம் தான் என்று நினைக்கிறோம். போட்டிக்காலம் சற்று நீட்டிகப்பட வேண்டும் என்ற பரிந்துரைகள் இருந்தாலும் வரவேற்கப்படுகின்றன. பரிந்துரைகளை ஆராய்ந்து நீட்டிப்பு மணற்கேணி குழுவினரால் பரீசீலனை செய்யப்படும்.

போட்டி விதிமுறைகள் இங்கே

போட்டியின் விதிமுறைகளில் ஒன்றுத் தவிர்த்து மணற்கேணி - 2009 விதிமுறைகளே பின்பற்றப்படுகிறது.

போட்டி நிறைவு நாளுக்கு 40 நாட்கள் இருக்கிறதே என்று எண்ணாமல் இன்றே கலந்து கொள்வதற்கான முயற்சிக்கு சுழி போடுங்கள், ஏனென்றால் காலம் மிகவும் விரைவானது, ஒவ்வொருக்கும் எதிர்பாராத வேறு சில பணிகளும் இடையே இடையே வந்து சேர்ந்து தடை ஏற்படும்.

போட்டியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துகள்.

இணைப்புகள் :

மணற்கேணி குழுவின் அனைத்து தகவல்களுக்கான இணைய தளம்

மணற்கேணி 2009 சில நினைவுகள் (எழுதியவர் பதிவர் மற்றும் தமிழ்வெளி இணைய தளத்தின் பொறுப்பாளர் நண்பர் திரு குழலி என்கிற பொன்.புருஷோத்தமன்)

போட்டியில் இணைந்து பங்காற்றும் தமிழ்வெளி

மணற்கேணி குழுவின் வலைப்பூ

Manarkeni 2009

Blogger template 'Fundamental' by Ourblogtemplates.com 2008.

Jump to TOP