"மணற்கேணி - 2010"

Manarkeni 2009  More than a Blog Aggregator

மணற்கேணி - 2009 இலக்கிய பிரிவு வெற்றியாளர் !

சிங்கைப் பதிவர் குழுமம் மற்றும் தமிழ்வெளி திரட்டி இணைந்து நடத்திய மணற்கேணி 2009, இலக்கிய பிரிவின் வெற்றியாளர் உறுதி செய்யப்படுள்ளார்.

இலக்கியப் பிரிவுக்கும் 10 கட்டுரைகள் வந்திருந்தன, அனைத்தும் மிகவும் சிறப்பாக இருந்தன, இருந்தாலும் மிகவும் சிறப்பான கட்டுரை என்று தமிழார்வள நடுவர்களால்
தமிழர் இசை பற்றிய கட்டுரை எழுதிய திரு பிரபாகர் வெற்றியாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

திரு பிரபாகர் அவர்களுக்கு வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் 'மணற்கேணி' சிங்கைப் பதிவர் குழுமம் மற்றும் தமிழ்வெளி குழுவினர் தெரிவித்துக் கொள்கின்றனர்.

இலக்கிய கட்டுரை வரைவாளர்கள் அனைவருக்கும் சிறப்பு பரிசுகள் பற்றிய தகவல் விரைவில் அறிவிக்கப்படும்.

தமிழர் இசை குறித்த திரு பிராபகர் கட்டுரையை வாசிக்க இங்கே அழுத்தவும்

- மணற்கேணி 2009 ஒருங்கிணைப்பாளர்
ஜோசப் பால்ராஜ்

மணற்கேணி - 2009 அறிவியல் பிரிவு வெற்றியாளர் அறிவிப்பு.

மணற்கேணி 2009 கருத்தாய்வு போட்டியில் ஆர்வமுடன் கலந்து கொண்ட அத்தனை போட்டியாளர்களுக்கும் சிங்கைப் பதிவர்கள் சார்பாக முதலில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

போட்டிக்கு வந்திருந்த ஒவ்வொரு படைப்பும், போட்டியாளர்களின் தீவிர உழைப்பை பறைசாற்றியது என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை. அந்தளவுக்கு அத்தனை படைப்புகளும் சிறப்பாக இருந்தன. இத்தனை கடினப்பட்டு போட்டியில் பங்கெடுத்தவர்களுக்கு நாங்கள் செய்யும் பெரிய மரியாதை,அந்தப் படைப்புகளை தகுதிவாய்ந்த நடுவர்களிடம் கொடுத்து மதிப்பிடுவது தான் என்பதில் சிங்கைப் பதிவர்கள் அனைவரும் உறுதியாய் இருந்தனர்.

அறிவியல் பிரிவுக்கு வந்த கட்டுரைகள் அனைத்தும் சிங்கையில் அறிவியல் ஆராய்சியாளர்களாக பணிபுரியும் தமிழார்வம் மிக்க நடுவர்களால் மதிப்பிடப்பட்டது. மொத்தம் ஐந்து ஆராய்சியாளர்கள் தங்களது கடுமையான பணிச்சுமைகளுக்கு நடுவில் இந்தப் பணியை செய்து முடித்துள்ளார்கள். இதுவே காலதாமதத்திற்கான மிக முக்கிய காரணம். போட்டியாளர்களையும், மற்றவர்களையும் மிக நீண்ட காலம் காக்க வைத்தமைக்கு வருத்தங்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

மணற்கேணி 2009 போட்டியின் அறிவியல் பிரிவில் வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள படைப்பு

தலைப்பு: நவீனகால நுண்ணோக்கிகள்

எழுதியவர்: இரா.இரஞ்சித்

வலைதள முகவரி: http://kaiyedu.blogspot.com


வெற்றி பெற்ற இரஞ்சித் அவர்களுக்கு சிங்கைப் பதிவர்கள் சார்பாக எங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

இலக்கிய பிரிவின் வெற்றியாளர் அறிவிப்பு வரும் வெள்ளியன்று வெளியாகும்.


வராது ஆனால் வரும் !

மணற்கேணி முடிவுகள் வருமா ? வராதா ? போட்டி நடக்கிறதா ? இல்லையா ? என்று தத்தமுக்குள் பதிவர்கள் பந்தயம் கட்டிய தாக அறிந்தோம், இன்னும் சிலர் மணற்கேணி 2009 என்கிற தலைப்பையே கூட மறந்திருப்பார்கள். பதிவர்கள் அனைவரிடத்திலும் இதன் காலம் தாழ்த்துதல் குறித்து வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம். காலம் தாழ்ந்தற்கு சில காரணங்கள் உண்டு, குறிப்பாக சிறப்பான நடுவர்களைத் தேர்ந்தெடுக்கவும், அவர்களின் ஒப்புதல் பெறவும் காலம் நீண்டது.

மணற்கேணி போட்டிக்கு 50 கட்டுரைகள் வரையில் வந்தது. 90 விழுக்காடு கருத்து செறிவுடன் எதிர்பார்த்ததை விட சிறப்பான உழைப்பை எழுத்தில் காட்டி இருந்தனர். போட்டியில் கலந்து கொண்டவர்கள் அனைவருக்கும் நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

குழு மின் அஞ்சலுக்கு வந்த மின் அஞ்சல்களுக்கு, பின்னூட்டங்களுக்கு உடனடியாக பதில் கூற முடியவில்லை, அந்த மின் அஞ்சல்களை நாள் தோறும் தொடர்பில் இருக்கும் மற்ற மின் அஞ்சல்களுடன் இணைத்திருக்காததால் உடனடியாக மின் அஞ்சல்களை வாசிக்க முடியாமல் போய் விட்டது. வருந்துகிறோம்.

மணற்கேணி போட்டி குறித்து கேள்வி எழுப்பிய பின்னூட்டங்கள் தானாகவே வெளியாகி இருந்ததால் கேள்விகளை உடனுக்குடன் படிப்பதற்கு வாய்பில்லாமல் போய் விட்டிருந்தது. மட்டுறுத்தல் வைத்திருந்தால் வெளி இடும் போதே அதற்கான பதிலும் சொல்லி இருக்க முடியும். இந்த போட்டியை நடத்தும் அனைவருமே பகுதி நேரமாக செய்வதாலும், முதல் முறையாக இவ்வாறான போட்டி நடத்துவதாலும் போதிய துய்ப்புகளை இதில் தான் கற்றுக் கொள்கிறோம். அடுத்து நடத்தும் போட்டிகளில் இந்த குறைகளை களைந்துவிட்டு சிறப்பாக செயல்படுவோம் என்கிற உறுதி கூறுகிறோம்.

போட்டி முடிவுகள்:

அரசியல், அறிவியல் மற்றும் இலக்கியம் இவற்றில் அறிவியல் பிரிவு நடுவர்களால் அறிவியல் பிரிவுக்கு வந்த கட்டுரைகளில் பரிசு பெரும் கட்டுரை முடிவு செய்யப்பட்டுள்ளது.

அறிவியல் போட்டியில் வெற்றியாளர் பற்றிய முடிவு வரும் புதன் கிழமை 10/பி/2010 (தேதி குறிப்பிட்டாகவிட்டது சத்தியமாக சொல்லிவிடுவோம்)
அறிவிக்கப்படும்

இலக்கியப் போட்டியின் முடிவு வரும் 12/பிப்/2010 அன்று அறிவிக்கப்படும்

அரசியல் பிரிவு பிப்ரவரி இறுதிக்குள் அறிவிக்கப்படும்.

போட்டியில் பங்கெடுத்தவர்கள் அனைவருக்கும் சிறப்பு பரிசுகள் உண்டு

Blogger template 'Fundamental' by Ourblogtemplates.com 2008.

Jump to TOP