"மணற்கேணி - 2010"

Manarkeni 2009  More than a Blog Aggregator

செந்தில்நாதனுக்கு இன்று இதய மாற்று அறுவை சிகிச்சை நடைபெறுகிறது !

நல்லிதயம் கொண்ட அன்பானவர்களே,


நமக்கு நன்கு அறிமுகம் ஆகியுள்ள சிங்கை செந்தில் நாதனுக்கு, இன்று காலை சிங்கை நேரப்படி 10.00 மணிக்கு (இந்திய நேரம் காலை 7:30 மணிக்கு) இதய மாற்று அறுவை சிகிச்சை நடைபெறுகிறது.

ஐந்தாண்டுகளுக்கு முன்பு நுண்கிருமி (வைரஸ்) காய்சலால் நலிவுற்ற செந்திலின் இதயம், துடிப்பு எண்ணிக்கையைக் குறைக்க மூச்சு திணறலில் அவ்வப்போது உடல் நலக்குறைவு ஏற்பட்டு மயங்கி விழுந்துக் கொண்டிருந்தார், பிறகு பேஸ் மேக்கர் பொருத்தப்பட்டு நான்கு ஆண்டுகள் வரை சமாளித்து வந்தார், பின்பு பேஸ் மேக்கரிலும் இதயச் செயல்பாடுகள் குறைய ஏறக்குறைய ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு, மாற்று இதய சிகிச்சை தான் ஒரே வழி மருத்துவர்களால் முடிவு செய்யப்பட்டு உடனடியாக மாற்று இதயம் கிடைக்காததால் தற்காலிகத் தீர்வாக மின்கலம் மூலம் இயங்கும் செயற்கைக் கருவி வழியாக இதயம் செய்யும் இரத்த ஓட்ட செயல்பாடுகள் சீராக்கப்பட்டது. உடல் நிலையும் நன்கு தேறி வர ஒராண்டுகாலமாக பகுதி நேரமாக பணிபுரிந்தும் வந்தார்.

இந்நிலையில் நேற்று இரவு மருத்துவமனையில் இருந்து செந்திலைத் தொடர்பு கொண்டு மாற்று இதயம் கிடைத்துள்ளதாகவும், இன்று காலை 10:00 மணிக்கு அறுவைச் சிகிச்சை நடைபெறுவதாகவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி இன்று காலை ஏழுமணிக்கு மருத்துவமனையில் செந்தில் சேர்ந்துள்ளார், முதல் நிலை மருத்துவ சோதனைகள் அனைத்தும் முடிந்துள்ளது. 10: 00 மணிக்கு அறுவை சிகிச்சை நடைபெறும்.

நல்லிதயங்களே, செந்திலின் இதய சிகிச்சை நல்லமுறையில் நடந்து, விரைவில் நலம் பெற உங்களுக்கு தெரிந்த வகையில் வாழ்த்துகளையும், வேண்டுதல்களையும் செய்யுங்கள்.

கூடவே செந்திலின் இதயமாகச் செயல்படப் போகின்ற அந்த முகம் தெரியாத (மூளைச் சாவு) கொடையாளியின் ஆன்ம சாந்திக்கும், அவரின் இல்லத்தினரின் மன அமைதிக்கும் வேண்டிக் கொள்ளுங்கள். இந்த ஒருகாரணத்திற்காகத் தான் செந்தில் தனக்கான மாற்று அறுவைச் சிகிச்சை உடனே நடக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டதே இல்லை, நடக்கும் போது நடக்கட்டும் என்றே சொல்லிக் கொண்டு வந்தார்.

மணற்கேணி 2010 தற்போதைய நிலவரம் !

சிங்கைப் பதிவர்கள் மற்றும் தமிழ்வெளி இணையத்தளம் நடத்தும் மணற்கேணி 2010 தலைப்பை ஒட்டி, மூன்று பிரிவுகளிலும் இடம் பெற்ற தலைப்புகளுக்,கு பேரன்பும் ஆர்வம் கொண்ட பதிவர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரின் மொத்தம் 103 கருத்து ஆக்கங்கள் எங்களுக்கு வந்திருக்கின்றன. இது சென்ற ஆண்டிற்கு வந்து ஆக்கங்களைவிட இரு மடங்கு மிகுதி. போட்டிக்கு வந்திருக்கும் ஆக்கங்களில் சில ஏற்கனவே வெளியான கட்டுரைகளின் மறுபதிப்பாக தலைப்பை மட்டும் மாற்றி அனுப்பி இருக்கிறார்கள், அவற்றை போட்டி விதிமுறைகளின் படி ஏற்க இயலாது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

அடுத்தகட்டமாக இவற்றை தலைப்பு மற்றும் பிரிவு வாரியாக அவற்றின் ஆய்வு திறன் கொண்ட 10க்கும் மேற்பட்ட நடுவர்களுக்கு அனுப்பும் பணியில் இருக்கிறோம். வந்திருக்கும் ஆக்கங்கள் சில கையினால் எழுதப்பட்டவையாகவும், பிடிஎஃப் கோப்பாகவும் இருக்கின்ற காரணத்தினால் அவற்றை மறுதட்டச்சில் ஒருங்குறிக்கு (யுனிக்கோட்) மாற்றி நடுவர்களுக்கு அனுப்பும் பணி வரும் 10 நாளைக்குள் முடிக்கப்பட வேண்டும் என்று திட்டமிடப்பட்டு நடந்தேறிவருகிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

அதன் பிறகு நடுவர்களுக்கு கொடுக்கப்படும் கால எல்லைகள் 15 நாள் வரை எடுத்துக் கொள்ளும், ஏனெனில் நடுவர்கள் நட்பு மற்றும் தமிழ் சமூக ஆர்வம் காரணமாக இதற்காக சற்று பணியிடையே நேரம் ஒதுக்கிச் செய்யவே 15 நாள் வரை தேவைப்படுகிறது. சென்றமுறை சிறந்த ஆக்கங்களைத் தேர்ந்தெடுப்பதன் நடைமுறைகளில் சில தொய்வுகள் ஏற்பட்டன, இந்த முறை அப்படி ஆகிவிடக் கூடாது என்பதற்காக மிகவும் திட்டமிட்டே அதற்கேற்றவாரு சில முடிவுகள் செய்திருக்கிறோம்.

சிறந்த கட்டுரைகளுக்கும் மட்டுமின்றி, கருத்து செறிவுடன் எழுதப்பட்ட ஆக்கங்களுக்கும் ஊக்கப் பரிசுகள் உண்டு என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

திட்டமிட்டபடி மணற்கேணி 2010 வெற்றியாளர்கள் பற்றிய முடிவு வரும் பிப்ரவரி 2011, 15ம் தேதிக்குள் அறிவிக்கப்படும். போட்டியாளர்கள் தங்கள் ஆக்கங்களை தங்களின் வலைப்பதிவுகளிலோ, இணையத் தளங்களிலோ வெளியிட்டுக் கொள்ளலாம்.

மேலும் போட்டிக் வந்த கட்டுரைகளை கருத்துப்பரிமாற்றங்களுக்கு இட்டுச் செல்லும் வகையில் கருத்துக்களம் அமைக்கப்பட்டு, சிறந்த கருத்துரையாடலுக்கு சிறப்புப் பரிசும் கொடுக்கப்படும், இதுபற்றிய அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும்.


எங்களது மணற்கேணி 2010 தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்ட அனைத்து வலைப்பதிவு திரட்டிகளுக்கும், வலைப்பதிவர்களுக்கும், போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கும் மற்றும் அறிவிப்புகளை நண்பர்களுக்கு தெரிவித்து ஊக்கப்படுத்திய அனைத்து தரப்பினருக்கும் நெஞ்ச்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.

அன்புடன்
மணற்கேணி 2010 குழுவினர்

இன்றே இப்படம் கடைசி - மணற்கேணி 2010 போட்டி

மணற்கேணி 2010

தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு
- திருக்குறள் - 396


சிங்கப்பூர் வலைப்பதிவர்கள் மற்றும் தமிழ்வெளி இணையதளம் இணைந்து நடத்தும் கருத்தாய்வு போட்டி மணற்கேணி 2010ற்கான போட்டி ஆக்கங்கள் அனுப்ப வேண்டிய கடைசி நாள் இன்று. உங்கள் கட்டுரைகளை இன்றே அனுப்பி போட்டியில் பங்களிக்க வேண்டுகிறது மணற்கேணி 2010 நிர்வாகக் குழு.

இது பற்றிய முழு தகவல்கள் பெற இங்கே சுட்டவும் http://www.sgtamilbloggers.com/

இணைய போட்டிகள் / நிகழ்ச்சிகள் பணால் ஆவது ஏன் ?

போட்டி நடத்துவதன் மூலம் நாங்கள் கற்றவை :

1. போட்டி நடத்தும் குழுவினர்களும் அவர்களை ஊக்குவிக்கும் சில நண்பர்கள் தவிர்த்து போட்டியை எல்லோருமே ஊக்கப்படுத்த முயற்சிக்கமாட்டார்கள். ஊக்கப்படுத்த நினைக்கும் சிலர் முயற்சியும் எடுக்க மாட்டார்கள். இது பொதுவான நடைமுறைதான், போட்டி நடத்தும் குழுக்குள் இதைக் கருத்தில் கொண்டு போட்டியை சரியான முறையில் கொண்டு செல்ல வேண்டும், இணையத்தில் எழுத்துவழியான இலக்கிய போட்டி என்பது கமல்/ரஜினி படங்கள் ரிலிஸ் ஆவதைப் போல் எல்லோரும் பேசுவார்கள் என்கிற எதிர்பார்ப்பு எந்த ஒரு போட்டிக் குழுவும் ஏற்படுத்திக் கொண்டால் போட்டி நடத்துவதில் சுணக்கம் ஏற்பட்டுவிடும்

2. போட்டி அறிவித்தாகிவிட்டது, இனி ஆக்கங்கள் வந்துவிடும் என்று இருந்துவிட்டால் கிடைக்கும் போட்டி ஆக்கங்கள் மிகவும் சொற்பமாகவே இருக்கும், போட்டி குறித்த அறிவிப்புகளையும், அதன் தொடர்பிலான சுவையான தகவல்களையும் தருவதன் மூலமே போட்டியில் கலந்து கொள்ள தூண்டமுடியும். எந்த ஒரு நிகழ்ச்சியும் விளம்பரம் இல்லாமல், அதுபற்றிப் பேசப்படமால் பரவலாக எல்லோரையும் சென்று சேராது.

3. போட்டி நடத்தும் குழுவினர் அனைவரும் இயன்றவரை போட்டிக்குரிய பணிகளை பிரித்துக் கொண்டு தன்னார்வத்துடன் செய்தால் மட்டுமே போட்டியின் நிகழ்வுகள் அனைத்தும் வெற்றிகரமாக அமைந்து வெற்றியாளர்களை மனநிறைவு அடையச் செய்யும்

4. கவர்ச்சியான பரிசு அறிவிப்புகள் மிகுதியான போட்டியாளர்களை ஈட்டித்தரும் என்பதைவிட சிறுகதை / கதை / கவிதை போன்ற சிற்றிலக்கிய போட்டிகளுக்கே மிகுதியானவர்கள் பங்குபெறுகிறார்கள்.

5. நல்ல கட்டுரைகளை எழுதவேண்டும் அதன் மூலம் தம்மை வெற்றிகரமான சமூகப் பார்வையாளனாக / எழுத்தாளனாக மாற்றிக் கொள்ள முடியும் என்று எண்ணுவோர்கள் எழுத்தை நேசிப்பவர்களில் இரண்டு விழுக்காடு கூட இல்லை

6. ஏற்கனவே கலந்து கொண்டவர்கள் வெற்றிப் பெறாவிட்டாலும், அவர்கள் கலந்து கொண்டதற்கு ஒரு மின் அஞ்சல் கூட நன்றி சொல்லிப் போடவில்லை என்றால் அடுத்த முறை அவர்கள் கலந்து கொள்ளவே யோசிப்பார்கள் அல்லது புறக்கணித்துவிடுவார்கள்

7. போட்டி நடத்துவது குறித்து போட்டி நடத்தும் குழு முன்கூட்டிய திட்டவரைவை தமக்குள் விவாதிக் கொள்ளாவிட்டாலோ, முழுமையான திட்ட வரைவை கொண்டிருக்காவிட்டாலோ போட்டியை வழி நடத்துவதில் பல இடையூறுகள் வரும்


8. போட்டியிடுபவர்களில் சிலர் ஏற்கனவே வெளியானதை இணையத்தில் இருந்து அப்படியே எடுத்தும் அனுப்புகிறார்கள், இவற்றை சரியாக கவனிக்காமல் ஒருவேளை அந்த போட்டியாளர் வெற்றியாளர் ஆனால் பின்னர் பெரிய சர்சையே ஏற்படும்

9. போட்டியின் வெற்றியாளர்கள் பரிசு பெற வர இயலாத நிலையில் மாற்று ஏற்பாடுகளாக அடுத்த ஒருவருக்கு வெற்றியாளர் வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்க முன்கூட்டிய திட்டங்கள் வைத்திருக்க வேண்டும்


10. போட்டியை வழி நடத்த ஒரு தலை மிகவும் தேவை, ஆனால் அந்த தலை தலையாரியாகவோ நாட்டாமையாகவோ மாறியானால் பிறர் தன்னார்வத்தால் வேலை செய்ய முன்வரமாட்டார்கள். அனைவரையும் ஒருங்கிணைத்து செயல்படும் பொறுமையானவரே போட்டியை நடத்தும் குழுவிற்கான தலையாக இருப்பது போட்டியை வெற்றியாக்கும். போட்டி நடத்தும் குழுவிற்குள் ஒருவர் டாமினேசன் செய்ய நினைத்தால் அந்த அமைப்பே அடுத்தக் கட்டத்திற்குள் செல்லாமல் களைந்துவிடும்


இவற்றில் ஒரு சில எங்கள் குழு சந்திக்க நேரிட்டது, பிற குழுவிலும் இவை நடந்தேறி உள்ளன. போட்டி நடத்துபவர்களும், போட்டியில் கலந்து கொள்வோரும் இவற்றைக் கருத்தில் கொள்ள வேண்டும் என்பதற்காக தொகுத்து இருக்கிறோம், இங்கு போட்டி போட்டி என்று ஒரு குறியீடாகத்தான் கொடுத்து இருக்கிறோம், இணைய வெளி சார்பாக ஏற்பாடும் செய்யும் நிகழ்ச்சிகளும் இது பொதுவானது தான்

*****

அன்பான வலைப்பதிவர்களே, எழுத்தாளர்களே, மாணவ/மணிகளே மற்றும் வாசகர்களே, எங்களது (சிங்கை தமிழ் வலைப்பதிவ்ர்கள் மற்றும் தமிழ்வெளி இணைய தளம்) மணற்கேணி - 2010 போட்டிக்கான ஆக்கங்கள் வந்து சேர நாளை இரவு 12:00 மணி (இந்திய நேரப்படி) வரை மட்டுமே நேரம் உள்ளது, எழுதி அனுப்பாமல் வைத்திருந்தால் உடனே அனுப்பி வைத்துவிடுங்கள், கடைசி நேரத்தில் அனுப்பலாம் என்று வைத்திருந்தால் ஒருவேளை மின்வெட்டின் காரணமாக இணைய இணைப்பு கிடைக்காமல் போகலாம், கணிணி செயல்படாமல் போகலாம் அல்லது வேறு ஏதோ முதன்மையான வேலை இடையூறு வரலாம். எனவே காலவிரயம் செய்யாமல் முடிந்தவரையும் குறிப்பிட்ட நேர எல்லைக்குள் அனுப்பி வைத்துவிடுங்கள்.

போட்டிக் குறித்த அனைத்து தகவல்களுக்கான இணைய தளம் சுட்டி

அன்புடன்
மணற்கேணி - 2010
சிங்கப்பூர் தமிழ் வலைப்பதிவர்கள்
மற்றும் தமிழ்வெளி இணைய தளம்

இன்னும் 5 நாட்களே உள்ளன

சிங்கை வலைப்பதிவர்களும் தமிழ்வெளியும் இணைந்து நடத்தும் மணற்கேணி 2010க்கான கட்டுரை அனுப்ப இறுதி நாளுக்கு இன்னும் 5 நாட்களே உள்ளன...

உங்கள் கட்டுரைகளை விரைந்து அனுப்பி ஒரு வார சிங்கப்பூர் சுற்றுலாவை வெல்லுங்கள்


மேலும் விபரங்களுக்கு http://www.sgtamilbloggers.com/

போட்டித் தலைப்புகள்

பிரிவு-1: அரசியல் / சமூகம் (அச)


இந்தப் பிரிவில் எழுதப்படும் கருத்தாக்கங்கள் அனுப்ப வேண்டிய மின் அஞ்சல் politics@sgtamilbloggers.com

1. களப்பிரர் காலம்

2. இலவசத் திட்டங்கள் ஏற்படுத்தும் மாற்றங்கள் - நன்மை தீமைகள்

3. எல்லா சாதிகளும் ஒடுக்கப்பட்ட உணர்வு கொண்டிருப்பது ஏன்?

4. இந்திய கூட்டமைப்பில் தமிழர் நிலை

5. தமிழகத்தில் நகரமயமாக்கலும் விளைவுகளும்

6. கருத்துரிமை சுதந்திரம், ஊடகங்களின் வணிக நோக்கம், மாற்று ஊடகங்கள்

7. ஈழத்தமிழர் நிலை நேற்று இன்று நாளை

8. சமச்சீர் கல்வி

9. கூட்டாண்மை(Corporate) அரசியல் - நவீன சுரண்டல்

10. புலம் பெயர்ந்த தமிழர்களிடத்தில் தமிழ் மற்றும் தமிழர் பண்பாட்டு விழுமங்கள் - நேற்று இன்று நாளை

பிரிவு-2: தமிழ் அறிவியல் (அறி)


இந்தப் பிரிவில் எழுதப்படும் கருத்தாக்கங்கள் அனுப்ப வேண்டிய மின் அஞ்சல் science@sgtamilbloggers.com


1.மரபுசாரா ஆற்றல் வளம்

2,தமிழ் கலைச்சொற்களைப் பயன்படுத்தி அறிவியல் கட்டுரை

3.தொழில் நுட்பத்துடன் கூடிய இயற்கை வேளாண்மை

4.அருகி வரும் நிலத்தடி நீரால் சந்திக்கவிருக்கும் சிக்கல்களும் அறிவியல் தீர்வும்

5.கணித்தமிழ்


பிரிவு-3: தமிழ் மொழி / இலக்கியம் (இல)


இந்தப் பிரிவில் எழுதப்படும் கருத்தாக்கங்கள் அனுப்ப வேண்டிய மின் அஞ்சல் literature@sgtamilbloggers.com

1. பழந்தமிழ் இலக்கியங்களில் ஒடுக்கப்பட்டோர் குரல்கள்

2. உலகத்தமிழ் செம்மொழி மாநாடு

3. நாட்டுப்புற இலக்கியங்கள்

4. சேரர்கள்

5. உரையாசிரியர்கள்

6. தமிழ் விக்கிப்பீடியா

7. மெல்லத்தமிழினி வாழும்

8. எழுத்துச் சீர்திருத்தம்


24,25,26,27,28,29,30,31

மணற்கேணி போட்டித் தொடர்பான கட்டுரைகள் அனுப்ப இறுதி நாள் டிசம்பர் 31 , 2010 என்பதை மீண்டும் நினைவூட்டுகிறோம்.


மணற்கேணி போட்டித் தொடர்பான நிகழ்ச்சிகள் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. வரப் போகும் வெற்றியாளர்களை வரவேற்க நாங்கள் ஆயத்தமாக இருக்கிறோம்.

சிங்கப்பூரின் புதிய சுற்றுலா தளமான மெரீனா பே சாண்ட் காணப் போகும் வெற்றியாளர்களில் நீங்களும் ஒருவராக இருக்கலாம்.



போட்டி நிறைவுற இன்னும் எட்டே நாட்கள் உள்ளன, எளிமையான போட்டித் தலைப்புகளைக் கொடுத்து இருக்கிறோம், சமூகத்திற்கும் சிந்தனைகளுக்கு உடையவர் நீங்கள் என்றால் அதைக் கட்டுரையாக்கி எங்களுக்கு அனுப்பலாமே.

போட்டிப் பற்றி அனைத்து விவரங்களுக்குமான சுட்டி :



தமிழ்மணம் 2010 போட்டி வெற்றிக்கு- சில குறிப்புகள் !

என்னதான் வலைப்பூன்னு வலைபதிவைக் குறிப்பிட்டாலும் வெளம்பரம் இல்லை என்றால் காகிதப்பூ தான். தமிழ்மணம் விருதில் பலர் பதிவுகளை பரிந்துரைத்திருப்பீர்கள். எப்போதும் இல்லாத அளவுக்கு 1500 பதிவர்களுக்கு மேல் பங்கு பெறும் நிகழ்வாக அமைந்திருக்கிறது தமிழ்மணம் 2010 போட்டி, குழுவாக இயங்கும் பதிவர்களுக்குள் அந்த குழுவின் தலைகளுக்கு எப்படியேனும் வாக்குகள் கிடைத்துவிடும், எந்தக் குழுவிலும் இடம் பெறாமல் இருப்பவர்களுக்கு வாக்குகள் கிடைப்பது கடினம் ஏனெனில் பதிவின் உள்ளடக்கத்தின் தரத்திற்குக் கிடைக்காத வாக்குகள் 'இவர்' எழுதி இருக்கிறார் என்பதற்காகக் கிடைப்பது உண்டு. இது சமுகக் குறைபாடு இல்லை, நடைமுறைதான். போட்டியில் கலந்து கொள்ளும் 1500 இடுகைகளையும் அனைவரும் படித்திருப்பார்கள் என்று நினைக்க முடியாது. மனதில் நிற்கும் பதிவுகளுக்கு கண்டிப்பாக வாக்குப் போடுகிறவர்கள் உண்டு.

போட்டிகள் கலந்து கொள்வது வெற்றிப் படிகட்டில் ஏறுவதன் முயற்சி, கலந்து கொள்ளாமல் இருப்பவர்களுக்கு அந்த வாய்ப்புகள் கை நழுவி விடும், பரிசு சீட்டு வாங்கியவரில் யாரோ ஒருவருக்கு முதல்பரிசு, பரிசு சீட்டே வாங்காதவர்களுக்கு எதுவும் கிடைக்காது இல்லையா ? வெற்றியாளவர்கள் அனைவரும் முயற்சி செய்து அதை அடைந்தவர்கள், வெற்றி தோல்விகளை கணக்கில் கொள்ளாது முயற்சி செய்வது வெற்றியின் படிநிலை.

நீங்கள் தமிழ்மணம் 2010 போட்டியில் கலந்து கொண்டிருந்தால், அதைத் தெரியப்படுத்தி, உங்கள் போட்டி இடுகையை சுட்டிக்காட்டி வாக்களிக்கச் சொல்லிக் கேட்கலாம், பதிவு பிடித்திருந்தால் வாக்களிக்கப் போகிறார்கள். விளம்பரம் இல்லாமல் விற்பனைகள் இல்லை. இது எந்த ஒரு போட்டிக் களத்திற்கும் பொருந்தும்.
முதல்படியாக தமிழ்மணம் 2010 போட்டில் கலந்து கொண்டவர்கள், அடுத்தபடி ஏற வாக்களிக்கக் கேட்கலாமே.

*********

சிங்கைப் பதிவர்கள் / தமிழ்வெளி இணையதளம் சார்பாக நடத்தபடும் மணற்கேணி - 2010 தேதி நீட்டிக்கப்பட்டு வரும் டிசம்பர் 31 வரை கட்டுரைகள் பெறப்படுகின்றன. சென்ற ஆண்டு மூன்று பதிவர்களைத் தேர்ந்தெடுத்து சிங்கைக்கு அழைத்து சிறப்பு செய்தோம். இந்த ஆண்டு அப்படி வரப்போகிறவர்கள் நீங்களாகக் கூட இருக்கலாம். போட்டி முடிய இன்னும் 14 நாட்களே உள்ளன. இதுவரை அறிந்திடாவிடில் போட்டிப் பற்றிய முழு விவரமும் இங்கே இருக்கிறது. கலந்து கொள்ளுங்கள், சிங்கப்பூருக்கு வாருங்கள், நாங்கள் உங்களை சந்திக்க ஆவலாக உள்ளோம்.

அன்புடன்
மணற்கேணி - 2010

Blogger template 'Fundamental' by Ourblogtemplates.com 2008.

Jump to TOP