"மணற்கேணி - 2010"

Manarkeni 2009  More than a Blog Aggregator

மணற்கேணி - 2009 மறுதேதி அறிவிப்பு !

மணற்கேணி -2009 போட்டி ஆக்கங்கள் அனுப்ப நிறைவு நாள் என்று ஆகஸ்ட் 15 ஆம் தேதி என முடிவு செய்து அறிவித்து இருந்தோம். சில பல தவிர்க்க முடியாத காரணங்களினால் கட்டுரையை பதிவர்கள் அனுப்பும் நிறைவு நாளாக செப்டம்பர் 30, 2009 மாற்றிய அமைக்கப் படுவதாக மணற்கேணி -2009 குழுவினரால் முடிவு செய்யப்பட்டுள்ளது.

பல நண்பர்களிடமிருந்து கட்டுரை பெறும் நிறைவு நாளை நீட்டிக்கச் சொல்லி வேண்டுகோள் மின் அஞ்சல் வந்ததாலும், பல நண்பர்கள் ஆக்கங்களுக்கு தேவையான தகவல் திரட்டுவதில் முனைந்திருந்ததாலும் எழுதுவதற்கு நேரம் கிடைக்கவில்லை, ஆக்கங்கள் பெறும் நிறைவு தேதியை மறுபரீசீலனை பண்ணுமாறு கேட்டு இருந்தார்கள்.

மேலும் தேதி மாற்றம் எதுவும் இல்லை என்று உறுதியாக முடிவு செய்து, கருத்தாய்வு (கட்டுரை) ஆக்கங்கள் அனுப்ப வேண்டிய நிறைவு நாள் 30 செப்டம்பர் 2009 என்று ஒரு மனதாக இறுதி செய்யப்பட்டுள்ளது.

மீண்டும் நினைவு படுத்துகிறோம்,

மொத்தம் 29 தலைப்புகளில் உள்ள மூன்று பிரிவுகளிலும், ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட தலைப்புகளில் தலைப்புக்கு ஒன்றாக 29 ஆக்கங்கள் வரை ஒருவரே அனுப்பலாம்.

ஒரே தலைப்புக்கு ஆக்கங்கள் அனுப்பினாலும் அனுப்பலாம். சிறந்தது தேர்ந்தெடுக்கப்படும்.

போட்டித் தொடர்பான சுட்டிகள் :

போட்டி குறித்த விரிவான அறிவிப்பு

போட்டி குறித்து அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

போட்டி விதிமுறைகள்

போட்டித் தலைப்புகள்

போட்டித் தொடர்பில் தகவல் பெற


விரைவில் ஆக்கங்களை அனுப்பி நல் ஆதரவு தருமாறு வேண்டிக் கொள்கிறோம்.

மணற்கேணி -2009 சிங்கைப் பதிவர்கள் குழு சார்பாக,
கோவி.கண்ணன்

2 பின்னூட்டங்கள்:

சி தயாளன்

:-) நல்லது..

ஆ.ஞானசேகரன்

மிக்க மகிழ்ச்சி

Blogger template 'Fundamental' by Ourblogtemplates.com 2008.

Jump to TOP